கோபியை நினைத்து வருத்தப்படும் பாக்கியா, திருமணம் பற்றி தெரிந்து அதிர்ச்சியில் தாத்தா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
கோபியை நினைத்து வருத்தப்படும் பாக்கியா, திருமணம் பற்றி தெரிந்து அதிர்ச்சியில் தாத்தா - இன்றைய
கோபியை நினைத்து வருத்தப்படும் பாக்கியா, திருமணம் பற்றி தெரிந்து அதிர்ச்சியில் தாத்தா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
கோபியை நினைத்து வருத்தப்படும் பாக்கியா, திருமணம் பற்றி தெரிந்து அதிர்ச்சியில் தாத்தா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவிடம் ஈஸ்வரி வந்து உன் வாழ்க்கை போய்விட்டது என சொல்ல ஆனால் பாக்கியா எனக்கு இனிமேல் இந்த குடும்பத்தை பார்த்துக் கொள்வது தான் வாழ்க்கை என சொல்கிறார். மறுபக்கம் கோபி திருமணம் பற்றி தெரிந்து ராமமூர்த்தி அதிர்ச்சி அடைகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபியை சந்தித்துவிட்டு வீட்டிற்கு வந்த ஈஸ்வரி பாக்கியாவிடம், உன் வாழ்க்கை இங்கே நாசமாகிவிட்டது என சொல்கிறார். ஆனால் பாக்கியா அதை நினைத்து நான் கவலைப்பட்டால் இந்த குடும்பத்திற்கு தேவையானது எதுவும் செய்ய முடியாது என சொல்கிறார். ஈஸ்வரி ஒரு பெண்ணிற்கு குடும்ப வாழ்க்கை எவ்வளவு முக்கியம் அதை பற்றி சொன்னால் சமைக்க போறேன் சாதிக்க போறேன் என சொல்கிறாய் என கேட்கிறார். ஆனால் பாக்கியா இனி என் வழக்கை இந்த சமையல் தான் என சொல்கிறார். ஈஸ்வரி உனக்கு பைத்தியம் பிடித்துள்ளது என திட்டிவிட்டு செல்கிறார்.

மறுபக்கம் கோபி ராதிகா பேசிக் கொண்டிருக்க அப்போது கோபி இப்போது தான் நிம்மதியாக இருப்பதாக சொல்கிறார். பின் ராதிகா அவங்க எதுவும் சொல்லவில்லையா என கேட்க, சொன்னாங்க என கோபி சொல்கிறார். உங்க குடும்பத்தை உங்களிடம் இருந்து பிரித்துவிட்டேன் என கோபி சொல்கிறார். அப்போது சந்துரு வந்து மெனு லிஸ்ட் பற்றி கேட்க கோபிக்கு பிடித்த ஸ்வீட்ஸ் செய்ய சொல்கிறார். பின் சந்துரு ஜெனிக்கு போன் செய்து மெனு பற்றி சொல்கிறார். அப்போது இனியா ஜெனியிடம் பேசிக் கொண்டிருக்க சந்துரு சொன்ன மெனு பற்றி இனியாவிடம் சொல்கிறார். இனியா இந்த இரண்டு இனிப்புகளும் அப்பாவிற்கு மிகவும் பிடிக்கும் என சொல்கிறார்.

பின் அப்போது எழில் வர பாக்கியா ப்ரொடியூசர் பிரச்சனை பற்றி கேட்கிறார். அப்போது எழில் அது சரியாகாது இப்படியே விட வேண்டியது தான், நான் கொஞ்ச நாள் வேலைக்கு போறேன். படம் அப்பறம் செய்து கொள்ளலாம் என சொல்ல, பாக்கியா வீட்டை பார்த்துக் கொள்ள எனக்கு தெரியும் என சொல்கிறார். பின் கோபி வீட்டிற்கு வந்து பாக்கியாவை அன்பாக அழைப்பது போலவும், இனிப்புகளை செய்து கொடுக்க சொல்ல பாக்கியா அவருக்கு சமைத்து கொடுக்கிறார். ஆனால் அதெல்லாம் பாக்கியாவின் கனவாக இருக்கிறது. கனவில் இருந்து எழுந்து பாக்கியா அழுகிறார்.

ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ. 25கோடி வென்ற ஆட்டோ ட்ரைவர் – குவியும் வாழ்த்துக்கள்!

மறுபக்கம் ஈஸ்வரி கோபியை நினைத்து கோவமாக இருக்க அப்போது எழில் வந்து என்ன ஆச்சு என கேட்கிறார். ஆனால் ஈஸ்வரி பதில் சொல்லாமல் இருக்க எழிலை சத்தம் போடுகிறார். பின் தாத்தா ஏன் அவனை திட்டுகிறாய் என கேட்க, ஈஸ்வரி கோபியை பார்த்தேன் அவன் ராதிகாவை திருமணம் செய்ய போவதாக சொல்கிறார். இதெல்லாம் நடக்க கூடாது என்பதால் தான் கோபி வெளியே போக வேண்டாம் என சொன்னேன் என ஈஸ்வரி சொல்கிறார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாத்தா எப்போது கல்யாணம் என கேட்டியா என கேட்கிறார். இல்லை அவன் இதை சொன்னதும் எனக்கு கோவம் வந்து விட்டது என ஈஸ்வரி சொல்ல, தாத்தா அவன் எப்படி திருமணம் செய்து கொள்கிறான் என நான் பார்க்கிறேன். நான் இருக்கும் வரை திருமணம் நடக்காது என தாத்தா சொல்கிறார்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!