ஈஸ்வரியை தனியாக சந்திக்க அழைக்கும் கோபி, பாக்கியாவை சந்தித்து பேசும் சந்துரு – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
ஈஸ்வரியை தனியாக சந்திக்க அழைக்கும் கோபி, பாக்கியாவை சந்தித்து பேசும் சந்துரு - இன்றைய
ஈஸ்வரியை தனியாக சந்திக்க அழைக்கும் கோபி, பாக்கியாவை சந்தித்து பேசும் சந்துரு - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
ஈஸ்வரியை தனியாக சந்திக்க அழைக்கும் கோபி, பாக்கியாவை சந்தித்து பேசும் சந்துரு – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகா திருமணத்திற்கு புது ஜவுளி எடுத்துக் கொண்டு வர ஆனால் கோபிக்கு இனியா நினைப்பாக இருக்கிறது. பின் ஜெனி பாக்கியா ராதிகா அண்ணன் என தெரியாமல் அவரை சந்தித்து சமையல் ஆர்டர் வாங்குகிறார். பின் கோபி ஈஸ்வரியிடம் திருமணம் பற்றி சொல்ல போவதாக ராதிகாவிடம் சொல்கிறார்

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகா புது துணிமணிகளை வாங்கி கொண்டு காரில் வந்து கொண்டிருக்க கோபிக்கு இனியா நியாபகமாக இருக்கிறது. கோபி வருத்தப்படுவதை பார்த்து ராதிகா இனியாவிற்கு இந்த ட்ரெஸ் பிடிக்கவில்லை என்றால் வேற ட்ரெஸ் வாங்கி கொள்ளலாம் என சொல்ல, கோபி இல்லை இதுவே போதும் என சொல்கிறார். பின் ஜெனி ராதிகாவின் அண்ணன் என தெரியாமல் போன் செய்து சமையல் செய்ய என்ன டிஸ் செய்ய வேண்டும் என லிஸ்ட் கேட்க, சந்துரு நான் வீட்டிற்கு சென்று பேசுகிறேன் என சொல்கிறார். உடனே ராதிகா சமையல் நன்றாக வர வேண்டும் என சொல்ல சந்துரு நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார்.

மறுபக்கம் எழிலிடம் சதீஸ் என்ன ஆச்சு என கேட்க எல்லாம் முடிந்துவிட்டது என சொல்கிறார். என்னாச்சு என சதீஸ் கேட்க, இதெல்லாம் சரியாக வராது இன்னைக்கே அலுவலகத்தை காலி செய்துவிடலாம் என சொல்கிறார். பின் ப்ரொடியூசர் மகள் வந்து என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என கேட்க ஆபிஸ் காலி செய்வதாக சொல்கிறார். உடனே ப்ரொடியூசர் மகள் இவ்வளவு ஈஸியாக சொல்றீங்க என கேட்க சதீஸ் நீங்களே படம் நடிக்கலாமே என சொல்கிறார். மறுபக்கம் கோபி மயூராவுடன் உனக்கு ட்ரெஸ் பிடித்துள்ளதா என கேட்க, பிடித்துள்ளதாக சொல்கிறாள் மயூ.

கோபி எனக்கு ஷாப்பிங் செய்வது என்பது பிடிக்காது என சொல்ல, ராதிகா மயூராவிடம் ட்ரெஸ் பிடித்துள்ளதா என கேட்கிறார். எனக்கு ரொம்ப பிடித்துள்ளது அங்கிள் தேர்வு செய்தது என சொல்ல, அப்போ அவங்க வாங்கி கொடுத்ததால் தான் பிடித்துள்ளதா என ராதிகா கேட்கிறார். கோபி ஏன் குழந்தையை மிரட்டுகிறாய் என கேட்க கல்யாணத்திற்கு பின் என்னை நீங்க மிரட்டாமல் இருந்தால் போதும் என சொல்கிறார். பின் ராதிகா கோபியிடம் சந்தோசம் தான என கேட்க, ஆமாம் ஆனால் அந்த வயசில் நடந்தால் அதிகம் சந்தோசம் கிடைக்கும் என கோபி சொல்கிறார்.

பின் கோபி நம்ம கல்யாணத்தை பற்றி அம்மாவிடம் சொல்லலாம் என இருப்பதாக சொல்கிறார். ராதிகா அதை கேட்டு தயக்கமடைய, அம்மா கல்யாணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என கேட்க, கோபி ஒப்புக் கொண்டாலும் இல்லை என்றாலும் நம்ம கல்யாணம் நடக்கும் என சொல்கிறார் கோபி, பின் ராதிகா வேற யாரிடம் சொல்ல போறீங்க என கேட்க, அம்மாவிடம் மட்டும் தான் சொல்ல போறேன் என சொல்கிறார். பின் கோபி வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சனை ஆகும் என பயப்படுறியா என கேட்க, அது உன் முகத்தில் தெரிகிறது என கோபி சொல்கிறார். என் அம்மாவிடம் சொன்னால் தான் சரியாக வரும் என கோபி சொல்கிறார். நீ கவலைப்படாதே நான் உன்னுடன் தான் இருப்பேன் என கோபி சொல்கிறார்.

பின் அவர் ஈஸ்வரிக்கு போன் செய்து எப்படி இருக்கீங்க அம்மா கேட்க, இப்போது தான் எங்களை பற்றி உனக்கு நியாபகம் வருகிறதா என ஈஸ்வரி கேட்கிறார். என் மீது கோவமா என கோபி கேட்க இல்லை என ஈஸ்வரி சொல்கிறார். என்ன விஷயம் என ஈஸ்வரி கேட்க, உங்களிடம் தனியாக பேச வேண்டும் பொன்னி அம்மன் கோவிலுக்கு வாங்க என கோபி சொல்கிறார். ஈஸ்வரி எதுவும் பேசாமல் போனை வைக்கிறார். தாத்தா வந்து உன் மகனா என கேட்க, சும்மா எப்படி இருக்கீங்க என விசாரித்தான் என ஈஸ்வரி சொல்கிறார். பின் தாத்தா அவன் செய்த வேலைக்கு எல்லாரும் நன்றாக இருப்பாங்க பாரு என கேட்கிறார்.

உக்ரைன் மாணவர்கள் இந்திய கல்லூரிகளில் சேர தடை – ஒன்றிய அரசு கைவிரிப்பு!

மறுபக்கம், ராதிகா என்ன சொன்னாங்க என கேட்க, கோவிலுக்கு வர சொல்லிருப்பதாக கோபி சொல்கிறார். பின் பாக்கியாவும் ஜெனியும் சமையல் லிஸ்ட் குறித்து பேச அலுவலகம் வருகின்றனர். அப்போது சந்துரு வர அது ராதிகாவின் அண்ணன் என தெரியாமல் பாக்கியாவும் ஜெனியும் பேசுகின்றனர். சந்துரு பெண்களிடம் ஆர்டர் கொடுத்தால் எப்படி செய்வார்கள் என கேட்க பாக்கியா அதெல்லாம் கவலைப்படாதீங்க எங்க வீட்டு விசேஷம் போல செய்து முடிப்பேன் என சொல்ல, அப்போது தான் சந்துருவிற்கு நம்பிக்கை வருகிறது.

பின் ஈஸ்வரி கோபி பேசியதை நினைத்து யோசித்து கொண்டிருக்க, செல்வி நீங்க இன்னைக்கு கோவிலுக்கு போகவில்லையா என கேட்கிறார். தாத்தாவும் கிளம்பவில்லையா என கேட்க ஈஸ்வரி நானும் எல்லா வாரமும் கோவிலுக்கு போறேன் ஆனால் குடும்பம் நன்றாக இல்லை அதனால் கோவிலுக்கு போகலாமா வேண்டாமா என யோசிப்பதாக சொல்கிறார். பின் தாத்தா கோவிலுக்கு கண்டிப்பாக போக சொல்ல ஈஸ்வரிக்கு கோபி வர சொன்னது நியாபகம் வருகிறது. உடனே அவர் கோவிலுக்கு கிளம்ப செல்வி நானும் வரவா என கேட்கிறார். ஆனால் ஈஸ்வரி வேண்டாம் என சொல்லி தனியாக கிளம்ப தாத்தாவிற்கு சந்தேகம் வருகிறது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!