புது ஆர்டர் வாங்கிய பாக்கியா, இனியா பற்றி பேசி வருத்தப்பட்ட கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவிற்கு திருமண மண்டபத்தின் சமையல் ஆர்டர் கிடைக்க அதை நினைத்து அவர் மிகவும் சந்தோசப்படுகிறார். பின் பெண்களை அழைத்து எப்படி சரியாக செய்து முடிக்க வேண்டும் என சொல்கிறார். மறுபக்கம் கோபி ராதிகா குடும்பத்துடன் கல்யாணத்திற்கு துணி எடுக்க செல்கிறார்
பாக்கியலட்சுமி
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகாவிடம் அவருடைய அம்மா, நீ கோபியுடன் சந்தோசமாக வாழ வேண்டும் என நினைத்தால் அந்த குடும்பத்துடன் உறவை முடிக்க வேண்டும் என சொல்கிறார். பின் ராதிகா என்ன பேசுறீங்க என கேட்க, ஆமாம் இப்போ நீ சும்மா விட்டுவிட்டால் அப்பறம் கோபி உன் கையை விட்டு சென்றுவிடுவார் என சொல்கிறார். டீச்சர் டீச்சர் என அவள் பின்னால் சென்றாய் ஆனால் அவள் உன்னை நம்பினாலா இல்லையே அது மாதிரி இனியா இனியா என சென்றால் இறுதியில் நீயும் மயூராவும் ரோட்டில் தான் இருக்க வேண்டும் நன்றாக யோசித்து கொள் என ராதிகாவின் அம்மா சொல்கிறார்.
மறுபக்கம் பாக்கியாவும் ஜெனியும் சமையல் ஆர்டர் வாங்க வருகின்றனர். அந்த தொழிலதிபர் பாக்கியாவை உட்கார சொல்கிறார். நீங்க இனிமேல் என்னுடைய மண்டபத்தில் கான்டராக்ட் கொடுப்பவர் என சொல்கிறார். பின் பாக்கியா உங்களுக்கு பெரிய மனது என சொல்லி சந்தோசப்படுகிறார். பின் அவர் நான் சொன்னது போலவே பெரிய ஹாலில் திருமணம் புக் செய்யப்பட்டுள்ளது. அதனால் உங்களுக்கு சமையல் ஆர்டரை கொடுக்க முடிவு செய்துள்ளதாக சொல்கிறார். சிறிய தவறு ஏற்பட்டாலும் என் மானம் போய்விடும் என சொல்ல, பாக்கியா எங்களுக்கு வாய்ப்பு என்பது பெரிய விஷயம் அதனால் அதை சரியாக செய்து கொடுத்து உங்க பெயரை காப்பாற்றுவோம் என சொல்கிறார்.
பின் ஜெனியை காட்டி இது யார் என கேட்க, இது என் மருமகள் எம்பிஏ படித்திருப்பதாக பாக்கியா சொல்கிறார். ஓ இவங்க தான் இந்த வேலைக்கு அப்ளை செய்ததா என கேட்க ஆமாம் என பாக்கியா சொல்கிறார். பின் பாக்கியா அட்வான்ஸ் வாங்கி கொண்டு செல்கிறார். மறுபக்கம் எழில் அலுவலகம் வர அங்கே புதிதாக ஒரு பெண் இருக்கிறாள். அதை பார்த்து எழில் யார் நீங்க என கேட்க ப்ரொடியூசர் இது என் மகள் என சொல்கிறார். பின் ப்ரொடியூசர் கதையை மாற்றுவது பற்றி என்ன முடிவு செய்துள்ளதாக கேட்க எழில் கதையை மாற்ற முடியாது என பிடிவாதமாக சொல்கிறார்.
ப்ரொடியூசர் இப்படி எல்லாம் பிடிவாதம் பிடித்தால் அவங்க சரியாக வரமாட்டார்கள் என தன்னுடைய மகளிடம் சொல்கிறார். மறுபக்கம் பாக்கியா பெண்களை வரவழைத்து இது போல வேலை வந்துள்ளதாக சொல்கிறார். இது மற்ற இடம் போல இல்லை நமக்கு இது புது டாஸ்க் இதில் நன்றாக சமைத்தால் நமக்கு பெரிய ஆர்டர் கிடைக்கும் என சொல்கிறார். எல்லாரும் சரி என சொல்ல பாக்கியா சமையல் மட்டுமில்லாமல் கல்யாண வீட்டில் வரவேற்பது தாம்பூல பை கொடுப்பது என நிறைய வேலை செய்ய போகிறோம் அதனால் யாருக்கு என்ன விருப்பமோ அதில் பெயர் கொடுங்கள் என சொல்கிறார்.
தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளி வகுப்புகள் நடத்த அனுமதி – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
மறுபக்கம் ராதிகா குடும்பத்துடன் கோபி திருமணத்திற்கு ஜவுளி வாங்கி கொண்டு வருகிறார். அப்போது உங்களுக்கு ட்ரெஸ் பிடித்துள்ளதா என ராதிகா கேட்க ஆண்களுக்கு எந்த உடை என்றாலும் சரி தான் ஆனால் பெண்கள் தான் தேடி தேடி ட்ரெஸ் எடுப்பதாக கோபி சொல்கிறார். பின் இனியாவிற்கு வாங்கிய ட்ரெஸ் எங்கே என கேட்க மயூரா முன்னாடி தான் இருப்பதாக சொல்கிறார். பின் ராதிகாவின் அம்மா இனியா கல்யாணத்திற்கே வரவில்லை அப்பறம் என்ன என கேட்கிறார். கோபி இனியா இத்தனை வருசமாக என்னுடன் வந்து நான் வாங்கி கொடுக்கும் துணியை தான் எடுப்பாள் என கோபி வருத்தத்துடன் பேசி கவலைப்பட அவருக்கு ராதிகா ஆதரவாக பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்