வேலைக்கு செல்ல முடிவு செய்த ஜெனி, திருமண ஏற்பாடுகளை செய்யும் சந்துரு கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
வேலைக்கு செல்ல முடிவு செய்த ஜெனி, திருமண ஏற்பாடுகளை செய்யும் சந்துரு கோபி - இன்றைய
வேலைக்கு செல்ல முடிவு செய்த ஜெனி, திருமண ஏற்பாடுகளை செய்யும் சந்துரு கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
வேலைக்கு செல்ல முடிவு செய்த ஜெனி, திருமண ஏற்பாடுகளை செய்யும் சந்துரு கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், அமிர்தா திருமணத்திற்கு குடும்பத்தினர் வருத்தம் தெரிவிப்பது குறித்து எழிலிடம் சொல்கிறார். மறுபக்கம் ஜெனி வேலைக்கு செல்ல முடிவு செய்ய செழியன் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். பின் சந்துரு கோபி சேர்ந்து திருமண ஏற்பாடுகளை செய்கின்றனர்

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், அமிர்தாவிற்கு எழில் போன் செய்ய எதுவும் அங்கே பிரச்சனை இல்லையா என எழில் கேட்கிறார். உடனே அமிர்தா உங்களிடம் சொல்லலாமா என தெரியவில்லை என சொல்கிறார். எழில் நமக்குள்ள என்ன இருக்கு சொல்லுங்க என சொல்ல, உடனே அமிர்தா உங்க குடும்பத்தில் நடப்பதை எல்லாம் பார்த்துவிட்டு அம்மா அப்பா வருத்தத்தில் இருப்பதாக சொல்கிறார். திருமணம் செய்வது சரியாக வருமா என யோசிப்பதாக சொல்கிறார். எழில் அதை கேட்டு எல்லாம் அப்பாவால் இப்படி நடக்கிறது என கோபப்படுகிறார். அமிர்தா எல்லாம் சரியாகிவிடும் என எழிலிற்கு சொல்ல அவர் ஒருத்தரின் சந்தோஷத்திற்காக குடும்பத்தை கஷ்டப்படுத்துவதாக சொல்ல, உங்களுக்கு என் மீது நம்பிக்கை இருக்கிறதா என அமிர்தா கேட்கிறார்.

எனக்கு இருக்கிறது நீங்க தைரியமாக படத்தை எடுத்து முடிங்க என அமிர்தா சொல்கிறார். பின் எழில் கீழே வர செழியன் யாரிடம் பேசினாய் என கேட்கிறார். உடனே எழில் உனக்கு என்ன என கேட்க செழியன் நீ யாரிடம் பேசினாய் என எனக்கு தெரியாதா என கேட்கிறார். உன் அப்பா செய்த காரியத்தை விட நான் சரியாக தான் செய்தேன் என சொல்ல, அப்பாவை பற்றி பேசாதே என செழியன் சொல்கிறார். ஆமாம் உன் அப்பா போல யாராலயும் செய்ய முடியாது என சொல்ல, உடனே செழியன் ஓசியில் சாப்பிட்டுவிட்டு எல்லாம் பேசுவாய் என சொல்கிறார். உடனே எழில் உன்னிடம் பேச முடியாது என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

மறுபக்கம் இனியா கோபிக்கு போன் செய்து பேசுகிறார். எனக்கு உங்க நினைப்பாக இருப்பதாக இனியா சொல்ல, கோபி எனக்கும் உன் நினைப்பாக இருப்பதாக கோபி சொல்கிறார். நேற்று எதாவது பிரச்சனை ஆனதா என கேட்க ஆமாம் அம்மா தான் கோவப்பட்டார்கள் என சொல்கிறார். உடனே கோபி வீட்டில் உன்னை காணவில்லை என்றால் தேட தான் செய்வார்கள் செழியனிடம் சொன்னேன் ஆனால் அவன் மறந்துவிட்டான் போல என சொல்கிறார். பின் பாக்கிய வர இனியா வேண்டும் என்றே உங்க கூட வந்தது தான் சந்தோசமாக இருந்தது என சொல்கிறார்.

பல தடவை உங்களுடன் வந்து ஐஸ் சாப்பிட்டு இருப்பேன் ஆனால் நேற்று தான் புதிதாக இருந்ததாக இனியா சொல்கிறார். கோபி உண்மை தான் என சொல்கிறார். மறுபக்கம் ஜெனி செழியனிடம் நான் பேசிக் கொண்டிருக்க, அப்பா வந்தாரா என செழியன் கேட்கிறார் இல்லை என சொல்ல, ஜெனி ஆன்டி கல்யாண மண்டப இன்டெர்வியூவில் தேர்வாகிவிட்டதாக சொல்கிறார். அதை கேட்டு செழியன் அதிர்ச்சி அடைய அது எவ்வளவு கஷ்டம் என கேட்கிறார். உடனே ஜெனி அவங்க ஆர்வமாக செய்கிறார்கள் நடக்கட்டும் என சொல்கிறார். பின் ஜெனி நான் வேலைக்கு போக முடிவு செய்துள்ளதாக சொல்ல செழியன் எதற்கு என கேட்கிறார். ஆன்டி தனியாக கஷ்டப்படுவதாக சொல்ல, அவங்க தான் எல்லாம் பார்த்து கொள்வதாக சொன்னார்கள் அதனால் பார்த்து கொள்ளட்டும் என செழியன் உறுதியாக சொல்கிறார்

பின் கோபி ராதிகாவும் நிம்மதியாக இருக்க, கோபி ராதிகாவை புகழ்ந்து பேசுகிறார். எனக்கு மிகவும் சந்தோசமாக இருப்பதாக ராதிகா சொல்ல, கோபி எனக்கும் தான் இதற்காக தான் எல்லாம் செய்தேன் என சொல்ல ராதிகா அதை கேட்டு சந்தோசப்படுகிறார். அப்போது சந்துரு வர கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யலாம் என சொல்கிறார். ராதிகா நல்ல மண்டபம் பார்க்க வேண்டும் என சொல்ல சந்துரு அதை கேட்டு சந்தோசப்படுகிறார். நாம இப்போ சென்று தேடுவோம் நல்ல மண்டபம் கிடைக்கும் என சொல்கிறார். பின் சந்துருவும் கோபியும் மண்டபம் புக் செய்ய வருகின்றனர்.

வீட்டை பார்க்க வரும் விவகாரமான ஆட்கள்; பதற்றத்தில் குடும்பத்தினர் – பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷாக் ட்விஸ்ட்!

சந்துரு இவங்க பெரிய இடம் என சொல்ல கோபி அதை கேட்டு சந்தோசப்படுகிறார். கோபி எதற்காக இவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டும் என கேட்க சந்துரு ராதிகாவின் கல்யாணத்தை எப்படி எல்லாம் நடத்த வேண்டும் என ஆசைப்படுகிறேன் அதனால் நீங்க எதுவும் சொல்லாதீங்க என சொல்கிறார். பின் மேனேஜரை பார்த்து ஹால் புக் செய்கின்றனர். அட்வான்ஸ் கொடுத்து ஹால் புக் செய்கின்றனர். பின் சந்துரு கோபியிடம் யாரை கூப்பிட போறீங்க என கேட்க அம்மாவை கூப்பிட வேண்டும் என ஆசை இருப்பதாக கோபி சொல்கிறார். மறுபக்கம் பாக்கியா இந்த ஆர்டர் கிடைத்தால் நன்றாக செய்ய வேண்டும் என சொல்ல செல்வி இந்த ஆர்டர் நமக்கு தான் கிடைக்கும் என சொல்கிறார். பின் தாத்தாவிடம் செல்வி சொல்ல, அப்போது ஜெனி வந்து வேலைக்கு போக முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!