கோபியை கிண்டல் செய்யும் ராமமூர்த்தி.. ஆன்லைன் பேங்கிங் பற்றி கற்றுக் கொள்ளும் பாக்கியா – இன்றைய எபிசோட்!

0
கோபியை கிண்டல் செய்யும் ராமமூர்த்தி.. ஆன்லைன் பேங்கிங் பற்றி கற்றுக் கொள்ளும் பாக்கியா - இன்றைய எபிசோட்!
கோபியை கிண்டல் செய்யும் ராமமூர்த்தி.. ஆன்லைன் பேங்கிங் பற்றி கற்றுக் கொள்ளும் பாக்கியா - இன்றைய எபிசோட்!
கோபியை கிண்டல் செய்யும் ராமமூர்த்தி.. ஆன்லைன் பேங்கிங் பற்றி கற்றுக் கொள்ளும் பாக்கியா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவிடம் எனக்கு கண்டிப்பாக காபி வேண்டும் என சொல்ல, ராதிகா அவரை பால் பாக்கெட் வாங்கி கொண்டு வர சொல்கிறார். பின் எழில் பாக்கியாவிற்கு ஆன்லைன் பேங்கிங் பற்றி சொல்லி கொடுக்கிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவிடம் எனக்கு காபி வேண்டும் என கேட்கிறார். உடனே ராதிகா காபியா என கோவமாக கேட்க, வண்டிக்கு பெட்ரோல் எப்படி தேவையோ அது போல எனக்கு காபி வேண்டும் என சொல்கிறார். எனக்கு காலை ராத்திரி என காபி வேண்டும் என கோபி சொல்கிறார். உடனே ராதிகா ராத்திரி எல்லாம் காபி கொடுத்தால் தூக்கம் வருமா என கேட்கிறார். அதெல்லாம் எனக்கு வரும், எனக்கு காலை இரவு மட்டும் காபி கொடு என கெஞ்ச ராதிகா அதற்கு எதற்கு கெஞ்சுகிறீர்கள், காபி கொடு ராதிகா என சொன்னால் கொடுக்க போறேன் என சொல்கிறார்.

Exams Daily Mobile App Download

பின் ராதிகா காபி வேண்டும் என்றால் பால் வாங்கி கொண்டு வாருங்கள் என சொல்ல, கோபி நானா என கேட்கிறார். ஆமாம் ஏன் நம்ம வீட்டிற்கு பால் வராதா என கேட்க, நாம இப்போது தான வந்திருக்கிறோம் அதனால் இன்னும் சொல்லவில்லை என ராதிகா சொல்கிறார். பின் கோபி வேறு வழி இல்லாமல் பால் வாங்க செல்கிறார். மறுபக்கம் எழில் வர்ஷினி உடன் பேசிக் கொண்டிருக்க, செல்வி வர்ஷினி அந்த ப்ரொடியூசர் பொண்ணு தான என கேட்கிறார். ஆமாம் என எழில் சொல்ல, அந்த பெண்ணிற்கு உன்னை பிடிக்கும் போல என கேட்கிறார். பாக்கியா என் மகனை எல்லாருக்கும் பிடிக்கும் என சொல்கிறார்.

கதிரை வம்பிழுக்கும் எதிர் டீம் போட்டியாளர், புது வீடு பற்றி பேசும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

பின் பாக்கியா ஆன்லைன் பேங்கிங் பற்றி கேட்க, எழில் அவருக்கு எளிமையாக எப்படி செய்வது என சொல்லி கொடுக்கிறார். போன் நம்பர் வைத்து சுலபமாக பணம் அனுப்பலாம் என எழில் சொல்ல, உடனே பாக்கியா நான் ஒருமுறை பணம் அனுப்புகிறேன் என சொல்கிறார். பின் செல்வி எனக்கு பணம் அனுப்பு என சொல்ல,பாக்கியா அவருக்கு பணம் அனுப்பி கத்துக் கொள்கிறார். பின் கோபி பால் பாக்கெட் வாங்கி கொண்டு வர, அப்போது ராமமூர்த்தி வெளியே போன் பேச வருகிறார். கோபி ராமமூர்த்தியை பார்த்து பால் பாக்கெட்டை மறைத்து வைக்க, ராமமூர்த்தி அதை பார்த்து கிண்டல் செய்கிறார். உடனே கோபி என் வீட்டிற்கு நான் வாங்குவேன் உனக்கு என்ன என கோவமாக பேசுகிறார்.

Follow our Instagram for more Latest Updates

மறுபக்கம் கோபி பால் பாக்கெட்டை கொண்டு சென்று கொடுக்க, ஆனால் ராதிகா மயூராவை கிளப்பிக் கொண்டு இருக்கிறார். கோபி இப்போதும் காபி கிடைக்காது போல என நினைத்துவிட்டு குளித்துவிட்டு வருகிறார். அப்போது ராதிகா காபி கொண்டு வந்து கொடுக்க, கோபி அதை ருசித்து கொடுக்கிறார். அதன் பின் மயூராவிற்கு ராதிகா உப்புமா கொடுத்துவிட்டு, கோபிக்கும் உப்புமா கொடுக்கிறார். கோபி எனக்கு உப்புமா பிடிக்காது என சொல்ல, உடனே ராதிகா இது தான் நல்ல உணவு என சொல்கிறார். கோபி வேற வழி இல்லாமல் உனக்கு எல்லாம் வேண்டும் என நினைத்து கொண்டு சாப்பிடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!