கோபியிடம் கோவப்பட்டு பேசும் ராதிகா.. ஹோட்டலில் சாப்பாடு வாங்கி மாட்டிக் கொண்ட ஜெனி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
கோபியிடம் கோவப்பட்டு பேசும் ராதிகா.. ஹோட்டலில் சாப்பாடு வாங்கி மாட்டிக் கொண்ட ஜெனி - இன்றைய
கோபியிடம் கோவப்பட்டு பேசும் ராதிகா.. ஹோட்டலில் சாப்பாடு வாங்கி மாட்டிக் கொண்ட ஜெனி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
கோபியிடம் கோவப்பட்டு பேசும் ராதிகா.. ஹோட்டலில் சாப்பாடு வாங்கி மாட்டிக் கொண்ட ஜெனி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனியும் செழியனும் சேர்ந்து ஹோட்டலில் சாப்பாடு வாங்கி கொடுத்துவிட்டு வீட்டில் சமைத்ததாக பொய் சொல்கின்றனர். மறுபக்கம் கோபிக்கு காபி கூட கொடுக்காமல் ராதிகா கோவமாக இருக்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனி செழியனும் ஹோட்டலில் சாப்பாடு வாங்கி வைத்துவிட்டு ஜெனி சமைத்ததாக சொல்கிறார்கள். எழில் பாக்கியாவிற்கு உண்மை தெரிந்தும் அவர்கள் பேசாமல் இருக்கின்றனர். இனியா நீங்க எப்படி சமைத்தீர்கள் என கேட்க, ஏன் உனக்கு சந்தேகம் என செழியன் கேட்கிறார். ஜெனிக்கு சமைக்க தெரியாதே அதனால் தான் இனியா கேட்கிறாள் என ஈஸ்வரி சொல்ல, அவள் காலையில் கத்துக் கொண்டு சமைத்திருப்பாள் என பாக்கியா சொல்கிறார். பின் செழியன் வேற சட்னி வைத்து ஈஸ்வரியை சாப்பிட சொல்ல, இது நன்றாக இல்லை என ஈஸ்வரி சொல்கிறார்.

இனியா அனைத்தையும் சாப்பிட்டுவிட்டு எனக்கு என்னமோ ஹோட்டலில் சாப்பிடுவது போல இருப்பதாக சொல்கிறார். என்னால் இன்னும் நம்ப முடியவில்லை என ஈஸ்வரி சொல்கிறார். ஆனால் ஜெனி நான் என்னமோ ஹோட்டலில் வாங்கி கொண்டு வந்தது போல பேசுறீங்க என கேட்கிறார். மறுபக்கம் கோபி குளித்துவிட்டு துண்டு கேட்க, ஆனால் ராதிகாவுக்கு காது கேட்கவே இல்லை. அவர் கீழே பேசிக் கொண்டு இருக்க, கோபி துண்டு தேடி பார்த்து கோபப்படுகிறார். ராதிகா ராதிகா என கத்திக் கொண்டே இருக்க, ஆனால் ராதிகா வரவே இல்லை. அதனால் கோபி வேஷ்டியை வைத்து துடைத்து கொள்கிறார்.

பின் அவர் கீழே வந்து பார்க்க, குடும்பமாக பேசிக் கொண்டு இருக்கீங்க ஆனால் என்னை யாருமே கண்டு கொள்ளவில்லை என சொல்கிறார். ராதிகாவின் அம்மா நானும் தாத்தாவும் குதிரையில் போனோம் என சொல்ல, கோபி யாரு தாத்தா என கேட்கிறார். சந்துரு என் அப்பா தான் என சொல்ல, அம்மா கொடைக்கானல் போன கதையை சொல்வதாக சொல்கிறார். பின் மயூரா அம்மா நீங்க கொடைக்கானலில் குதிரையில் போனீங்களா என கேட்க, கோபி இவளுக்கு கொடைக்கானல் நியாபகம் வந்தால் கோவப்படுவாளே என நினைத்து கோபி எனக்கு குதிரை என்றால் பயம் என சொல்கிறார்.

40% அளவில் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு – முதல்வர் பெருமிதம்!

பின் அனைவரும் பேசிக் கொண்டே இருக்க, கோபி ஒரு காபி கூட கிடைக்கவில்லை என நினைக்கிறார். அப்போது சந்துரு டீ கேட்க, கோபி எனக்கு காபி வேண்டும் என சொல்கிறார். ராதிகா அம்மா எல்லாருக்கும் டீ கொடுக்க கோபிக்கு டீ பிடிக்காது. அதனால் அவர் குடிக்கவில்லை. மறுபக்கம் இனியா ஸ்கூலிற்கு கிளம்ப பத்திரமாக போக வேண்டும் என பாக்கியா சொல்கிறார். பின் ராதிகா ரூமிற்கு வர கோபி ஏன் என்னிடம் எதுவும் பேசாமல் இருக்கிறாய் என கேட்கிறார். குளித்துவிட்டு துண்டு கூட இல்லாமல் உன்னை கூப்பிட்டேன் என கோபி சொல்ல, உங்க குடும்பம் செய்ததற்கு எல்லாம் பழி வாங்க வேண்டும். நாம நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என ராதிகா கோபியிடம் சத்தம் போடுகிறார். பின் பாக்கியா சமையல் வேலையை கவனிக்க, ஜெனி நான் உதவி செய்கிறேன் என சொல்கிறார். பின் ஜெனி கொடைக்கானலில் கோபியை பார்த்தது பற்றி கேட்க, பாக்கியா எனக்கு பழகிவிட்டது என சொல்கிறார். பின் ஹோட்டலில் வாங்கிய கவர்களை பாக்கியா பார்க்க ஜெனி மாட்டி கொள்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!