கோபியை டாடி டாடி என அழைத்த மயூ.. வருத்தப்பட்ட இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
கோபியை டாடி டாடி என அழைத்த மயூ.. வருத்தப்பட்ட இனியா - இன்றைய
கோபியை டாடி டாடி என அழைத்த மயூ.. வருத்தப்பட்ட இனியா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
கோபியை டாடி டாடி என அழைத்த மயூ.. வருத்தப்பட்ட இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா பாக்கியாவுடம் பேரன்ட்ஸ் மீட்டிங் வர, மயூராவை அழைத்து கொண்டு கோபியும் வருகிறார். இனியா அதை நினைத்து வருத்தப்பட பாக்கியா அவளுக்கு ஆறுதல் சொல்கிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா ஸ்கூலில் பேரன்ட்ஸ் மீட்டிங் வர அங்கே, மயூராவின் அப்பா என சொல்லிக் கொண்டு கோபி வருகிறார். உடனே இனியாவின் நண்பர்களும், அவர்களின் பெற்றோர்களும் என்ன இனியா அப்பா அந்த பெண்ணுடன் வந்திருக்கிறார் என கேட்கிறார்கள். ஆனால் பாக்கியா எதுவும் சொல்லாமல் இருக்கிறார். கோபி நின்று இனியாவை பார்க்க, உடனே மயூரா வந்து டாடி வாங்க என சொல்லி அழைத்து செல்கிறார். அதை பார்த்து இனியா வருத்தப்படுகிறார். பின் பாக்கியா மீட்டிங் அழைத்து செல்கிறார். அங்கே இனியா நன்றாக படிக்கிறாளா என கேட்க, நன்றாக படிக்கிறாள். இன்னும் நன்றாக படிக்க முடியும் என டீச்சர் சொல்கிறார். பாக்கியா வீட்டில் பிரச்சனை இனிமேல் நன்றாக படிப்பாள் என சொல்கிறார்.

இனியா டாடி வரவில்லையா என டீச்சர் கேட்க இல்லை என பாக்கியா சொல்கிறார். மறுபக்கம் மயூராவின் டீச்சர் இது யார் என கேட்க, மயூராவின் டாடி என ராதிகா சொல்கிறார். பின் அனைவரும் சைன் செய்துவிட்டு கிளம்புகின்றனர். அப்போது கோபி வெளியே வந்து ராதிகாவிடம் நான் இனியாவை பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன் என சொல்கிறார். மயூரா நானும் வருகிறேன் என சொல்லிவிட்டு உடன் வருகிறார். அப்போது கோபி இனியாவை அழைக்க, நான் வந்து டீச்சரை பார்க்கவா என கேட்கிறார். ஆனால் இனியா தேவை இல்லை என் அம்மா வந்து பார்த்துவிட்டார்கள் என சொல்கிறார். கோபி இனியா என கூப்பிட எல்லாரும் அதை ஒரு மாதிரி பார்க்கிறார்கள்.

பாக்கியா கோபியை வந்து நாடகம் போடாதீங்க என சொல்ல, கோபி பாக்கியாவிடம் கோவமாக பேசுகிறார். அப்போது இனியா நீங்க போங்க என சொல்ல, உடனே மயூரா டாடி நீங்க என் டாடி தான என சொல்லி கையை பிடித்து அழைத்து செல்கிறார். அதை பார்த்து இனியாவின் தோழிகள் கேள்வி கேட்கின்றனர். ஆனால் பாக்கியா இந்த கேள்வியை அவரிடம் கேட்டு இருக்கலாமே என கேட்கிறார். இனியா அப்பா செய்வதற்கு இனியா எப்படி பதில் சொல்ல முடியும் என பாக்கியா கேட்கிறார். வெளியே வந்து இனியா வருத்தப்பட்டு அழ, உடனே பாக்கியா நாம எந்த தவறும் செய்யவில்லை. அதனால் அழ வேண்டாம் என சொல்கிறார். என் தோழிகள் பார்த்தார்கள் என இனியா சொல்லி அழ, அவங்க பேசினால் பேசட்டும் கொஞ்ச நாள் தான் பேசுவாங்க அப்பறம் பேசமாட்டாங்க அதனால் அதை நினைத்து நாம கவலைப்பட வேண்டாம் என பாக்கியா சொல்கிறார்.

மயூவுடன் கோபியை பார்த்து வருத்தத்தில் இனியா.. பாசத்துடன் கோபி! – தடுத்து விடும் ராதிகா!

மறுபக்கம் கோபியிடம் மயூரா நீங்க எனக்கு யாரு என கேட்க, நான் உன்னுடைய டாடி என கோபி சொல்கிறார். அப்போது மயூரா எனக்கும் டாடி இனியா அக்காவிற்கும் டாடியா என கேட்க, ஆமாம் என கோபி சொல்கிறார். அது எப்படி என மயூரா கேட்க, அப்போ ஏன் அவங்க நம்மை கோவமாக பார்க்கிறார்கள் என கேட்கிறார். கோபி பதில் சொல்ல முடியாமல் இருக்க, உடனே ராதிகா கோவமாக வண்டியில் ஏறுகிறார். பின் பாக்கியாவும் இனியாவும் ஹோட்டல் வர, பாக்கியா இனியாவிற்கு பிடித்தது எல்லாம் ஆர்டர் செய்கிறார். உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என இனியா கேட்க, எனக்கு தெரியும் என பாக்கியா சொல்கிறார். பின் பாக்கியாவிடம் இனியா நீ கவலைப்படவில்லையா என கேட்க, எனக்கு அதை தவிர வேலை நிறைய இருக்கிறது என பாக்கியா சொல்கிறார். இனிமேல் நீ அவரை பற்றி கவலைப்பட கூடாது, நன்றாக படிக்க வேண்டும் என பாக்கியா சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!