பாக்கியாவை அவமானப்படுத்திய கோபி.. கோபியை பிரிப்பதாக ராதிகாவிடம் சவால் விட்ட இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியாவை தேடி பாக்கியா ராதிகா வீட்டிற்கு வர ஆனால் கோபி இனியாவை காட்டாமல் ரூமில் பூட்டி வைக்கிறார். இனியாவை பார்க்காமல் நான் போகமாட்டேன் என பாக்கியா சொல்ல, ஆனால் கோபி இனியா என்னுடைய மகள் என சொல்கிறார். பின் ராதிகாவிடம் இனியா கோபியை என் வீட்டிற்கு அழைத்து செல்வேன் என சவால் விடுகிறார்.
பாக்கியலட்சுமி
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியாவை தேடி பாக்கியா ராதிகா வீட்டிற்கு வருகிறார். அப்போது வாசலில் நின்று இனியாவை பார்க்க வேண்டும் என சொல்லி கூப்பிடுகிறார். எழிலும் இனியாவை கூப்பிட பாக்கியாவின் சத்தம் கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார். பின் இனியாவிடம் உன் அம்மா உன்னை கூட்டிக் கொண்டு சென்றுவிடுவாள், அப்பறம் எதற்கு டூர் போனாய் என கேட்டு உன்னை பயங்கரமாக திட்டுவாள் என சொல்லி ரூமிற்குள் இருக்க வைக்கிறார். ரூமிற்குள் வெளியே வந்து கதவை சாவியை கொண்டு பூட்டிவிட்டுகிறார். என்ன செய்கிறாய் என ராமமூர்த்தி கேட்க, இனியா என்னுடைய பொண்ணு என கோபி சொல்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
பின் பாக்கியா என்னுடைய பொண்ணை நான் பார்க்க வேண்டும் என சொல்ல, அவளை காட்ட முடியாது என கோபி சொல்கிறார். பாக்கியா ஸ்கூலிற்கு இனியாவை பார்க்க வந்தால் அவளை என் கண்ணில் காட்டாமல் அழைத்து சென்றுவிட்டீர்கள், என் மகளை நான் பார்த்தால் போதும் என சொல்ல, இது என்னுடைய வீடு இனியா என்னுடைய மகள் அவளை காட்டமாட்டேன் என கோபி சொல்கிறார். எழில் தேவை இல்லாமல் பேசாதீங்க என சொல்ல,நான் அப்படி தான் பேசுவேன் என் குடும்பத்தை என்னிடம் இருந்து பிரித்து வீட்டை விட்டு வெளியே அனுப்புனாய் அப்போது எனக்கு எப்படி இருந்துருக்கும் என கோபி சொல்ல, பாக்கியா அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.
கோபி பேசுவதை பார்த்து ராதிகாவும் அதிர்ச்சி அடைய, ராமமூர்த்தி தேவை இல்லாமல் பேசாதே என சொல்கிறார். இனியா எல்லாத்தையும் கேட்டு கொண்டு எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறாள். பின் எழில் இனியாவை அழைக்க, என் மகள் வரமாட்டாள் இது என்னுடைய வீடு இதற்கு மேல் இங்கே இருந்தால் மரியாதை கெட்டுவிடும் என கோபி சொல்கிறார். பாக்கியாவால் இதற்கு மேல் இருக்க முடியாமல் அழுது கொண்டே வீட்டிற்கு வருகிறார். வீட்டில் எல்லாரும் இனியாவிற்கு எதுவும் இல்லையே என கேட்க, எழில் கோபி வீட்டிற்கு சென்றது பற்றியும் இனியாவை காட்டாமல் இருந்தது பற்றி சொல்கிறார்.
பின் ராமமூர்த்தி வந்து பாக்கியாவிற்கு ஆறுதல் சொல்கிறார். அப்போது இனியா நன்றாக இருப்பதாக ராமமூர்த்தி சொல்ல, எனக்கு அது போதும் என பாக்கியா சமாதானம் ஆகிறார். பின் ராமமூர்த்தி இனியாவிடம் உன் அம்மா கூப்பிட்டது உனக்கு கேட்கவில்லையா அவளை பார்த்தால் உனக்கு பாவமாக இல்லையா என கேட்க, உடனே இனியா பாவமாக தான் இருந்தது, ஆனால் நான் அம்மாவிடம் பேசினால் அப்பா என்னிடம் கோவித்துக் கொள்வார் என இனியா சொல்கிறார். அப்போ உனக்கு அம்மா கவலைப்பட்டால் கவலை இல்லையா என ராமமூர்த்தி கேட்க, இவர்கள் பேசுவதை ராதிகா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் வாக்காளர் & ஆதார் அட்டை இணைப்பு – 3.62 கோடி வாக்காளர்களின் விவரங்கள் சேகரிப்பு!
அப்போது இனியா அப்பா என் மீது கோவமாக இல்லாமல் இருந்தால் தான் நம்ம வீட்டிற்கு வருவார் என சொல்ல, ராமமூர்த்தி நீ என்ன பேசுகிறாய் என தெரிந்து தான் பேசுகிறாயா என கேட்கிறார். உடனே இனியா அப்பா கண்டிப்பாக நம்ம வீட்டிற்கு வருவார் என சொல்ல, உடனே ராதிகா எனக்கும் அவருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது என சொல்கிறார். உடனே இனியா அப்பாவிற்கு அம்மா மீது தான் கோவம் எங்கள் மீது இல்லை அதனால் கண்டிப்பாக அப்பா வருவார் என சவால் விடுகிறார். ராதிகா என்ன பேசுகிறாய் நீ என கேட்க, ராமமூர்த்தி அவள் தான் சின்ன பொண்ணு தெரியாமல் பேசுவதாக சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.