இனியா ராதிகா இடையே நடந்த சண்டை.. பாக்கியாவிற்கு கிடைத்த கேட்டரிங் ஆர்டர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
இனியா ராதிகா இடையே நடந்த சண்டை.. பாக்கியாவிற்கு கிடைத்த கேட்டரிங் ஆர்டர் - இன்றைய
இனியா ராதிகா இடையே நடந்த சண்டை.. பாக்கியாவிற்கு கிடைத்த கேட்டரிங் ஆர்டர் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
இனியா ராதிகா இடையே நடந்த சண்டை.. பாக்கியாவிற்கு கிடைத்த கேட்டரிங் ஆர்டர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவிற்கு ராஜசேகர் புது கேட்டரிங் ஆர்டர் ஒன்றை கொடுக்கிறார். பாக்கியா அதை நினைத்து சந்தோசப்படுகிறார். பின் இனியா ராதிகா இடையே சண்டை வர கோபி இனியாவிற்கு ஆதரவாக இருக்கிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா ராஜசேகர் சாரை பார்க்க செல்வி உடன் செல்கின்றார். அப்போது ராஜசேகர் சார் ஆர்டர் பற்றி கேட்க, பிறந்தநாள் விழா, நிச்சயதார்த்தம் அது போல தான் ஆர்டர் வருவதாக பாக்கியா சொல்கிறார். பின் ராஜசேகர் அது சின்ன மஹால் அதனால் அவ்வளவு தான் வரும் என சொல்கிறார். பின் ராஜசேகர் என் நண்பரின் அலுவலகம் ஒன்று உள்ளது. அதில் கேன்டீன் வைக்க ஆள் தேடிக் கொண்டிருக்கிறான். அங்கே பெண்கள் தான் கேன்டீன் வைக்க வேண்டும் என குறிக்கோளுடன் அவன் இருப்பதாக சொல்கிறார். நான் உங்களை சொல்கிறேன் என ராஜசேகர் சொல்ல, பாக்கியா அதை கேட்டு சந்தோசப்படுகிறார்.

Follow our Instagram for more Latest Updates

மறுபக்கம் மயூராவிற்கு இனியா கணக்கு சொல்லி கொடுக்க ராதிகா கடைக்கு சென்றுவிட்டு வருகிறார். இருவரும் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து ராதிகா சந்தோசப்படுகிறார். பின் ராதிகா டேபிளில் இனியா காபி குடிக்காமல் வைத்திருப்பதை பார்த்து, ஏன் குடிக்கவில்லை என இனியாவிடம் கேள்வி கேட்கிறார். எனக்கு காபி புடிக்காது என இனியா சொல்ல, உனக்கு இன்னும் என்னவெல்லாம் பிடிக்காது என ராதிகா கேட்கிறார். ராதிகா ஏன் என்னை இப்படி எதிரி மாதிரி பார்க்கிறாய் என ராதிகா கேட்க, ஆமாம் நீங்க எனக்கு எதிரி தான் என இனியா சொல்கிறார். பின் ராதிகா உன் அம்மாவிடம் இப்படி தான் பேசுவியா என கேட்க, நீங்க எனக்கு அம்மா இல்லையே என இனியா சொல்கிறார். உடனே ராதிகா கோவமாக உள்ளே செல்கிறார்.

பின் ஈஸ்வரிக்கு எழில் மற்றும் ஜெனி ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்கியாவும் செல்வியும் வர என்ன ஆச்சு அத்தை என கேட்கிறார்கள். உடனே எழில் பாட்டி கோவிலுக்கு சென்றுவிட்டு வரும் போது யாரோ செயினை அறுக்க வந்ததாக சொல்கிறார். அதை கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். பின் ஜெனியிடம் கேன்டீன் ஆர்டர் பற்றி சொல்கிறார். ஜெனி அதை கேட்டு சந்தோசப்படுகிறார். பின் இனியா மயூரா படித்து கொண்டிருக்க கோபி இருவருக்கும் சாக்லேட் வாங்கி வருகிறார்.

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்றோர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

அப்போது இனியா முகம் சோகமாக இருப்பதை பார்த்து என்னாச்சு என கோபி கேட்கிறார். இனியா ஒன்றுமில்லை என சொல்ல, ராதிகா எதாவது சொன்னாளா என கோபி கேட்கிறார். அப்போது ராதிகா கோவமாக வர நான் என்ன அவளை சொல்ல போறேன் என ராதிகா கேட்கிறார். அவளுக்கு தான் என்னை பிடிக்கவில்லை என சொல்ல, ஆமாம் எனக்கு பிடிக்கவில்லை என இனியா சொல்கிறார். பார்த்தீங்களா கோபி என ராதிகா சொல்ல, இனியா உங்களுக்கு நான் முக்கியமா அவங்க முக்கியமா என கேட்கிறாள். பின் கோபி எனக்கு நீ தான் முக்கியம் என சொல்ல ராதிகா அதிர்ச்சி அடைகிறார். என்ன கோபி இதெல்லாம் என ராதிகா கேட்க, முதலில் நான் வருவதும் தான் மயூக்கு பிடிக்கவில்லை, அதனால் நான் இப்படி நடந்து கொள்ளவில்லையே என சொல்ல, ராதிகா அமைதியாக இருக்கிறார்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!