இனியாவிற்கும் ராதிகாவிற்கும் நடந்த வாக்குவாதம்.. எழிலிற்கு ஆறுதல் சொன்ன பாக்கியா – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா ரோட்டில் நடந்து செல்ல அக்கம்பக்கத்தினர் கோபியை பற்றி கேட்கின்றனர். பின் இனியாவிற்கும் ராதிகாவிற்கும் இடையே வாக்குவாதம் வருகிறது. அதனால் ராதிகா கோபி மீது கோபப்படுகிறார்.
பாக்கியலட்சுமி
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா ரோட்டில் வாக்கிங் செல்ல அப்போது பெண் ஒருவர் கோபி பற்றி கேட்கிறார். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் அவர் வீடு இங்கே தான இருக்கிறது அவரிடம் கேளுங்கள் என பாக்கியா சொல்கிறார். பின் இனியாவும் அவளுடைய அப்பாவிடம் சென்றுவிட்டாளாம் என் மகள் எல்லாம் அப்படி இல்லை என அந்த பெண் சொல்ல, உடனே பாக்கியா அப்படியா என கேட்கிறார். பின் ஏரியாவில் செக்கூரிட்டியாக இருப்பவர் வந்து பேச அப்போது கோபியும் வாக்கிங் வருகிறார். அந்த ஆள் இந்த மாதம் மெயின்டனன்ஸ் பற்றி கேட்க பாக்கியா என் வீட்டிற்கு என்னால் பணம் கொடுக்க முடியும் என சொல்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
பின் பாக்கியா வீட்டில் இனியா வருவது போல சத்தம் கேட்க, அவளை பற்றி நினைத்துக் கொண்டு கவலைப்படுகிறார். அப்போது எழில் அமிர்தா ஊருக்கு சென்றதை நினைத்து கவலைப்படுகிறார். பாக்கியாவிடம் காபி கேட்க அப்போது பாக்கியா எழில் முகம் வருத்தமாக இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என கேட்க, அமிர்தா ஊருக்கு சென்றுவிட்டதாக எழில் சொல்கிறார். அவள் என்னிடம் நம்பிக்கையாக இருப்பதாக சொன்னதாக பாக்கியா சொல்ல, அமிர்தாவிற்கு போன் செய்து பார்க்கிறார். ஆனால் அமிர்தா போன் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது. பாக்கியா எழிலை வருத்தப்படாதே என சொல்கிறார்.
மறுபக்கம் இனியா ராமமூர்த்தி மயூரா அமர்ந்து இருக்க, ராதிகா வந்து என்ன சாப்பிடுகிறாய் என கேட்கிறார். அப்போது இனியா எனக்கு தெரியவில்லை என பதில் சொல்கிறார். பின் ராதிகா ஸ்கூலிற்கு நேரமாகிவிட்டது இருவரும் போய் குளித்துவிட்டு வாருங்கள் என சொல்ல ஆனால் இனியா பதில் சொல்லவில்லை. தாத்தா அவங்க கேட்டால் பதில் சொல்லு என சொல்ல ஆனால் இனியா எனக்கு பிடிக்கவில்லை என சொல்கிறார். பின் கோபி வர மயூரா டாடி என கூப்பிடுவதை பார்த்து இனியாவிற்கு கோவம் வருகிறது.
PM கிசான் திட்டம் .. விவசாயிகளுக்கு ரூ. 6000 தவணைத்தொகை – அரசின் அதிரடி உத்தரவு!
பின் மயூராவும் இனியாவும் ஸ்கூலிற்கு கிளம்ப அப்போது ராதிகா சாப்பாடு செய்து வைக்கிறார். இனியா மயூரா கோபி என எல்லாரும் சாப்பிட வர அப்போது இனியாவிற்கு சாப்பாடு பிடிக்கவில்லை. ஆனால் கோபி இது உடம்புக்கு நல்லது என சொல்ல, ஆனால் இனியா எனக்கு இது பிடிக்காது என சொல்கிறார். பின் கோபி ராதிகாவிடம் இனியாவிற்கு பிடித்த சாப்பாட்டை செய்யலாமே என கேட்க, உடனே ராதிகா நான் கேட்டேன் அவளுக்கு தான் என்னை பிடிக்கவில்லையே என சொல்கிறார். பின் இனியா ஆமாம் பிடிக்கவில்லை என சொல்கிறார். உடனே ராதிகாவுக்கு கோவம் வருகிறது. இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.