பாக்கியா நியாபகமாக இருக்கும் இனியா.. வருத்தப்படும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் அமிர்தா வீட்டிற்கு வர ஆனால் அங்கே அமிர்தா இல்லை என சொல்கின்றனர். உடனே வருத்தப்பட்டு எழில் கிளம்புகிறார். மறுபக்கம் ராமமூர்த்தி பாக்கியா வீட்டிற்கு வருகிறார். இனியா கோபியிடம் நான் வீட்டிற்கு போகிறேன் என சொல்ல, அதை கேட்டு கோபி வருத்தப்படுகிறார்.
பாக்கியலட்சுமி
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் அமிர்தா வீட்டிற்கு வர ஆனால் அமிர்தாவின் அப்பா ஏற்கனவே பேசியது நியாபகத்திற்கு வருகிறது. ஆனாலும் எழில் வீட்டிற்குள் வர, அவர்கள் முகம் கொடுத்து பேசவில்லை. பின் அமிர்தா எங்கே என கேட்க உடனே அவர்கள் அமிர்தா ஊருக்கு சென்றுவிட்டதாக சொல்கிறார். எழில் திடீரென என கேட்க, அமிர்தாவின் படிப்பிற்காக தான் இங்கே வந்தோம் இப்போ எல்லாம் முடிந்துவிட்டதாக அமிர்தாவின் அப்பா சொல்கிறார். பின் நாங்களும் 2 வாரத்தில் கிளம்பிவிடுவோம் என சொல்கிறார். எழில் நான் என்ன செய்வது என கேட்க, நாங்க ஒன்றும் சொல்லவில்லை நடப்பது நடக்கட்டும் என அமிர்தாவின் அப்பா சொல்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
எழில் அதை கேட்டு வருத்தப்பட்டு செல்கிறார். மறுபக்கம் எல்லாரும் சாப்பிட வர ராமமூர்த்தி பாக்கியாவை பார்க்க வருகிறார். அவரை பார்த்ததும் பாக்கியா சந்தோசப்பட இனியா எப்படி இருக்கிறாள் என கேட்கிறார். ராமமூர்த்தி அவள் நன்றாக இருக்கிறாள் நீ அவளை நினைத்து வருத்தப்படாதே நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். பின் எனக்கு சாப்பாடு வேண்டும் என ராமமூர்த்தி கேட்க, உடனே பாக்கியா இன்னும் சாப்பிடவில்லையா என கேட்கிறார். அப்போது ராமமூர்த்தி அவள் சமைப்பது எல்லாம் நன்றாக இல்லை என சொல்கிறார். உன் மகன் இங்கே பாக்கியாவின் சாப்பாட்டை குறை சொல்வான் அங்கே வாய்யை மூடிக்கொண்டு சாப்பிடுவதாக சொல்கிறார்.
பின் ராமமூர்த்தி சாப்பிட்டுவிட்டு கிளம்ப இனியாவிற்கு பாக்கியா சாப்பாடு வைத்து கொடுக்கிறார். ஈஸ்வரி ராமமூர்த்தி கிளம்புவதை பார்த்து கோவப்பட இங்கே தான இருக்கேன் என அவர் சொல்கிறார். பின் பாக்கியா இனியாவை பார்த்துக்கொள்ள சொல்கிறார். மறுபக்கம் தாத்தா இனியாவை தனியாக அழைத்து பாக்கியா கொடுத்துவிட்ட சாப்பாட்டை கொடுக்கிறார். இனியா சாப்பிட்டுவிட்டு அம்மா பாவம் தான தாத்தா என சொல்கிறார். பின் எல்லாரும் படுக்க செல்ல, இனியா தாத்தாவுடன் ஹாலில் படுகிறாள். அப்போது ராதிகா உள்ளே படுக்க சொல்ல ஆனால் வேண்டாம் என இனியா சொல்கிறார். பின் தாத்தாவிடம் இனியா பேச உள்ளே சென்ற ராதிகா கோபியிடம் சென்று இனியாவை உள்ளே வர சொல்கிறார்.
தமிழகத்தில் சிறுபான்மையினர்களுக்கு ரூ. 10 லட்சம் உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் தகவல்!
அப்போது கோபி சென்று இனியாவிடம் உள்ளே சென்று படுக்க சொல்கிறார். ஆனால் இனியா வேண்டாம் என சொல்கிறார். கோபி இனியாவிடம் ஊர் கதை எல்லாம் பேசிக் கொண்டிருக்க ராதிகா தூங்காமல் இருக்கிறார். பின் இனியா நான் நம்ம வீட்டிற்கு போவோமா என கேட்க, கோபி ஏன் இங்கே என்ன பிரச்சனை என கேட்கிறார். அப்போது இனியா அம்மா பாவம் தான என சொல்ல, உடனே கோபி நான் பாவம் இல்லையா என கேட்கிறார். ராமமூர்த்தி கோபி பேசுவதை கேட்டு வருத்தப்படுகிறார். ஆனால் இனியா வீட்டிற்கு போக வேண்டும் என சொல்ல கோபி அதை கேட்டு வருத்தப்படுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.