இனியாவை அழைத்து வர கோபி வீட்டிற்கு சென்ற செழியன்.. வர மாட்டேன் என சொல்லும் இனியா, ராமமூர்த்தி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
இனியாவை அழைத்து வர கோபி வீட்டிற்கு சென்ற செழியன்.. வர மாட்டேன் என சொல்லும் இனியா, ராமமூர்த்தி - இன்றைய
இனியாவை அழைத்து வர கோபி வீட்டிற்கு சென்ற செழியன்.. வர மாட்டேன் என சொல்லும் இனியா, ராமமூர்த்தி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
இனியாவை அழைத்து வர கோபி வீட்டிற்கு சென்ற செழியன்.. வர மாட்டேன் என சொல்லும் இனியா, ராமமூர்த்தி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராமமூர்த்தி கோபி வீட்டிற்கு வந்ததை நினைத்து ராதிகா வருத்தப்படுகிறார். பின் கோபி அவரை சமாதானம் செய்கிறார். பின் ஈஸ்வரி இனியா ராமமூர்த்தியை அழைத்து வர சொல்லி செழியனிடம் சொல்ல, செழியன் சென்று அழைக்க ஆனால் இனியா வரமாட்டேன் என சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா ராமமூர்த்தி வந்ததை நினைத்து வருத்தமாக இருக்க, உடனே கோபி வந்து ராதிகா ஏன் தனியாக உள்ளே வந்து இருக்கிறாய் என கேட்கிறார். உடனே ராதிகா இனியா வந்தது எல்லாம் சரி தான் ஆனால் உங்க அப்பா வந்தது எனக்கு பயமாக இருப்பதாக சொல்கிறார். உடனே கோபி அவரை பார்த்தால் பிரச்சனை செய்ய வந்தது போல இல்லை என கோபி சொல்கிறார். இப்படி தினமும் பிரச்சனை வருவதை பார்த்தால் எனக்கு பயமாக இருப்பதாக சொல்ல, உடனே கோபி பிரச்சனை எதுவும் வரவில்லையே வந்தால் பார்க்கலாம் என சொல்கிறார். உடனே ராதிகா எனக்கு மயூராவும் நானும் வருத்தப்பட கூடாது என சொல்ல, அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

பின் ராதிகா சின்ன வீட்டில் எப்படி இத்தனை பேர் இருக்க முடியும் என கேட்க, கோபி நீ வெளியே வந்து பேசு என சொல்கிறார். வெளியே வந்து பேசமுடியாது எனக்கு பயமாக இருக்கிறது என சொல்ல, உடனே கோபி என்னால் முடியவில்லை என சொல்கிறார். பின் பாக்கியா மாமா எதற்கு அங்கே போக வேண்டும் என கேட்கிறார். மாத்திரை போடுபவர் ஏன் இப்படி செய்கிறார் என ஈஸ்வரி கேட்கிறார். பின் செல்வியை சென்று அழைத்து வரும்படி ஈஸ்வரி சொல்கிறார். உடனே பாக்கியா இனியாவிற்காக தாத்தா சென்று இருப்பதாக சொல்ல, எழில் தாத்தா வந்துவிடுவார் என சொல்கிறார். ஈஸ்வரி மீண்டும் செல்வியை அழைத்து வர சொல்கிறார். ஆனால் எழில் மீண்டும் வேண்டாம் என சொல்கிறார்.

பின் செழியன் நான் சென்று அழைத்து வருகிறேன் என சொல்கிறார். எழில் அதெல்லாம் முடியாது என சொல்ல, நான் கூப்பிட்டால் வருவார்கள் என கிளம்பி செல்கிறார். பின் செழியன் கோபி வீட்டிற்கு செல்ல கோபி சந்தோசமாக செழியனை வரவேற்கிறார். பின் ராமமூர்த்தி நீ எதற்கு இங்கே வந்தாய் என கேட்க, என் மகன் எதற்கு வருவான் என கோபி சொல்கிறார். நீ வந்தது எனக்கு ரொம்ப சந்தோசம் என சொல்ல, நான் இனியா தாத்தாவை அழைத்து செல்ல வந்திருக்கிறேன் என சொல்கிறார். செழியன் வா இனியா என கூப்பிட இனியா நான் வரவில்லை என சொல்கிறார். பின் செழியன் உன்னை கூப்பிட தான் வந்திருப்பதாக சொல்ல, இனியா வந்தால் நீங்க எல்லாரும் என்னை திட்டுவீர்கள் என சொல்கிறார்.

செழியன் தாத்தா நீங்களாவது சொல்லுங்கள் என சொல்ல, இனியா நான் வரவில்லை என சொல்கிறார். பின் கோபி இனியா இஷ்டப்பட்டு தான் வந்திருப்பதாக சொல்கிறார். பின் செழியன் அவர்கள் வராமல் கோவமாக செல்கிறார். மறுபக்கம் இனியாவை செழியன் அழைத்து வருவான் என அனைவரும் காத்து கொண்டிருக்க, ஆனால் செழியன் தனியாக வருகிறார். எல்லாரும் எங்கே என கேட்க, செழியன் அவர்கள் வரவில்லை என சொல்கிறார்கள். பின் செழியன் அவர்கள் வரமாட்டேன் என சொல்வதாக சொல்ல, செல்வி என்ன அக்கா இனியா பாப்பா நன்றி இல்லாமல் இருக்கிறது என சொல்கிறார். ஈஸ்வரி அவள் சின்ன பொண்ணு இந்த மனுஷன் தான் அவளை அழைத்து வர வேண்டும் என சொல்கிறார். ஈஸ்வரி நான் சென்று அழைத்து வருகிறேன் என சொல்ல, ஆனால் பாக்கியா நீங்க போக வேண்டாம் என சொல்கிறார்.

உங்கள் மகளின் எதிர்காலத்தை Safety பண்ண.. மத்திய அரசு வழங்கும் முத்தான 3 திட்டங்கள் -விவரம் உள்ளே!

பாக்கியா அவள் அங்கையே இருக்கட்டும் என சொல்கிறார். ஈஸ்வரி அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். எழிலும் அங்கே போக வேண்டாம் என சொல்கிறார். செழியன் நீங்க போனாலும் வரமாட்டாங்க என சொல்ல ஜெனி செழியனை அமைதியாக இருக்க சொல்கிறார். நீயும் ஏன் இப்படி பேசுகிறாய் என கேட்க, எழில் இனியாவை அந்த ஆள் விடமாட்டார் என சொல்ல, ஈஸ்வரி எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை என சொல்கிறார். பாக்கியாவும் இப்படி பேசுவதாக சொல்ல, உடனே எழில் அவள் அங்கையே இருக்கட்டும் அப்போ தான் அருமை புரியும் என சொல்கிறார். பின் தாத்தாவும் இனியாவும் விளையாடி கொண்டிருக்க அம்மா என் மீது கோவமாக இருக்காங்களா என கேட்கிறார். நீ செய்தது தவறு என சொல்ல, இனியா அம்மா மிகவும் அழுதார்களா என கேட்கிறார். அவளும் மனுஷி தான எத்தனை விசயத்திற்கு அழுவாள் என தாத்தா சொல்ல, இனியா வருத்தப்படுகிறாள். அவர்கள் விளையாட மயூரா வந்து பார்க்கிறாள். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!