ராதிகாவின் சமையலை சாப்பிட முடியாமல் கஷ்டப்படும் கோபி, திருமணம் பற்றி பாக்கியாவிடம் பேசிய எழில் – இன்றைய எபிசோட்!

0
ராதிகாவின் சமையலை சாப்பிட முடியாமல் கஷ்டப்படும் கோபி, திருமணம் பற்றி பாக்கியாவிடம் பேசிய எழில் - இன்றைய எபிசோட்!
ராதிகாவின் சமையலை சாப்பிட முடியாமல் கஷ்டப்படும் கோபி, திருமணம் பற்றி பாக்கியாவிடம் பேசிய எழில் - இன்றைய எபிசோட்!
ராதிகாவின் சமையலை சாப்பிட முடியாமல் கஷ்டப்படும் கோபி, திருமணம் பற்றி பாக்கியாவிடம் பேசிய எழில் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா எல்லாருக்கும் அருமையான சாப்பாடுகளை சமைத்து கொடுக்கிறார். பின் கோபிக்கு பணம் கொடுத்தது பற்றி சொல்ல, ஈஸ்வரி கோவித்து கொள்கிறார். மறுபக்கம் ராதிகா நூடுல்ஸ் சமைத்து கொடுக்க கோபிக்கு பிடிக்கவில்லை. பின் எழில் அமிர்தாவை திருமணம் செய்வது பற்றி பாக்கியாவிடம் பேசுகிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா எல்லாருக்கும் சாப்பாடு பரிமாற விதவிதமாக நிறைய சாப்பாடுகளை செய்கிறார். உடனே செழியன் அப்பா போன பின் விதவிதமாக சமைக்கிறாய் என கேட்க, பாக்கியா வருத்தப்படுகிறார். ஈஸ்வரி தேவை இல்லாமல் பேசாதே என சொல்ல, செழியன் நான் சும்மா சொன்னேன் என சொல்கிறார். மறுபக்கம் எழில் அவர் இருக்கும் வரை தொல்லை செய்தார் போன பின் நிம்மதியாக இருக்கிறாயா என கேட்க, ஈஸ்வரி தேவை இல்லாமல் பேசாதீங்க என சொல்கிறார். பாக்கியா சமையல் ஆர்டர் வந்தது அதற்கு சமைத்ததாக சொல்கிறார். ஈஸ்வரி மண்டபம் ஆர்டர் பார்ப்பது போதும், உடம்பை கஷ்டப்படுத்ததே என சொல்கிறார். எழில் செழியன் ஆமாம் நீ கஷ்டப்பட வேண்டாம் என சொல்கிறார்.

பின் பாக்கியா உங்க பையனுக்கு இன்று நான் 40000 ருபாய் அனுப்பிட்டேன் என சொல்ல, ஈஸ்வரி ஏன் அனுப்பினாய் என கேட்கிறார். நான் பணத்தை கொடுப்பதாக சொன்னேன்ல அதனால் தான் அனுப்பினேன் என சொல்கிறார். அவன் கோவத்தில் கேட்டால் நீ அனுப்புவியா என ஈஸ்வரி கேட்க, நீ நஷ்ட ஈடு வாங்கவில்லை அப்பறம் ஏன் பணம் கொடுத்தாய் என ராமமூர்த்தி கேட்கிறார். எல்லா நஷ்டமும் இவளுக்கு தான் என ஈஸ்வரி கோவித்து கொள்கிறார். ஆனால் பாக்கியா பட்ட அவமானத்துக்கு பதில் சொன்னது போல இருக்கிறது. அதனால் சந்தோசம் தான் என சொல்கிறார்.

மறுபக்கம் ராதிகா கோபிக்கு நூடுல்ஸ் சமைத்து கொடுக்க அதை சாப்பிட முடியாமல் கோபி கஷ்டப்படுகிறார். உடனே ராதிகா உங்களுக்கு நூடுல்ஸ் பிடிக்காதா என கேட்க, எப்பவாவது சாப்பிட பிடிக்கும் நீ பிரியாணி சிக்கன் மட்டன் எல்லாம் செய்ய தெரியாதா என கேட்கிறார். எனக்கு அடுப்படியில் இருந்து சமைக்க பிடிக்காது என ராதிகா சொல்கிறார். கோபிக்கு அதை சாப்பிட முடியாமல் இருக்க, கோபி எனக்கு சமையல் பிடிக்கும் சாப்பிட புடிக்கும் என சொல்ல, ராதிகா அப்போ இனிமேல் நீங்க சமைங்க என சொல்கிறார். ஆனால் கோபி எனக்கு சமையல் சரியாக தெரியாது என சொல்கிறார்.

பின் எழில் பாக்கியாவிடம் பேச விட, அமிர்தா வீட்டிற்கு சென்றது பற்றி சொல்கிறார். அப்போது எல்லாரும் அங்கே எப்படி இருக்காங்க என கேட்க, எல்லாரும் நன்றாக இருக்காங்க, அவங்க அப்பா இப்படி செய்ததால் பயப்படுகிறார்கள். அமிர்தாவை நான் கல்யாணம் செய்து கொள்வேன் என அவர்கள் நம்புகிறார்கள் ஆனால் நம்ம வீட்டில் இருந்து வந்து பேச வேண்டும் என நினைக்கிறார்கள் என எழில் சொல்கிறார். ஆனால் பாக்கியா நீ தான் உறுதி கொடுக்க வேண்டும். இப்போ அத்தை மாமாவிடம் என்னால் பேச முடியாது. நம்ம வீடு இருக்கும் நிலைமையில் கஷ்டம் அதை நீ தான் சொல்லி புரிய வைக்க வேண்டும் என பாக்கியா சொல்கிறார். நீங்க பொறுமையாக காத்திருக்க வேண்டும் என பாக்கியா சொல்கிறார்.

நவ.16 தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

மறுபக்கம் கோபி ராதிகாவிற்கும் மயூராவிற்கும் இடையே வந்து படுத்துக் கொள்கிறார். அப்போது ராதிகா என்ன ஆளுக்கு முன்னால் வந்து படுத்திருக்கீங்க என கேட்க, உடனே கோபி என்னை மட்டும் கீழே படுக்க வைக்கிறீர்கள். அதனால் தான் நான் முன்னாடியே வந்து படுத்துக் கொண்டேன் என சொல்கிறார். உடனே மயூரா உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என கேட்க ஆமாம் உன் முன்னால் தான கல்யாணம் நடந்துச்சு என கோபி கேட்கிறார். அப்போ நான் ஏன் உங்களை அங்கிள் என கூப்பிடுகிறேன். நான் உங்களை அப்பா என கூப்பிடவா என கேட்கிறார். அதை கேட்டு ராதிகாவும் கோபியும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!