ராமமூர்த்தியை கத்தியால் குத்த போகும் கோபி.. மயூரா மீது கோவப்படும் இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
ராமமூர்த்தியை கத்தியால் குத்த போகும் கோபி.. மயூரா மீது கோவப்படும் இனியா - இன்றைய
ராமமூர்த்தியை கத்தியால் குத்த போகும் கோபி.. மயூரா மீது கோவப்படும் இனியா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
ராமமூர்த்தியை கத்தியால் குத்த போகும் கோபி.. மயூரா மீது கோவப்படும் இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், செழியன் ஜெனியை அக்கறையாக கவனித்து கொள்ள அதை பார்த்து பாக்கியா ஈஸ்வரி சந்தோசப்படுகின்றனர். மறுபக்கம் வர்ஷினி ஜெனியை பார்க்க வருகிறார். பின் ராமமூர்த்தி ரோட்டில் நின்று கோபியை தாத்தா என அழைக்க உடனே கோபிக்கு கோவம் வருகிறது

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், செழியன் ஜெனி மாசமாக இருப்பதால் அவரை அக்கறையுடன் கவனித்து கொள்கிறார். ஈஸ்வரி மற்றும் பாக்கியா அதனை பார்த்து சந்தோசப்படுகின்றனர்.ஜெனி நன்றாக சாப்பிட வேண்டும் என்பதால் அவருக்கு ஜூஸ் ஊட்டி விடுகிறார். அப்போது தாத்தா கூப்பிட செழியன் பார்த்துக் கொள்வது பற்றி சொல்கின்றனர். அப்போது வீட்டிற்கு வர்ஷினி வருகிறார். பாக்கியாவை பார்த்ததும் வர்ஷினி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார். பின் ஈஸ்வரியை ஆன்டி என அழைக்க அவருக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை

பாக்கியா அதை பார்த்து அத்தைக்கு வயசு கம்மி தான என சொல்கிறார். பின் ஜெனி வந்ததும் வர்ஷினி நான் உங்களை தான் பார்க்க வந்தேன் என சொல்லி பரிசுகளையும் பழங்களையும் கொடுக்கிறார். பின் ஜெனி உள்ளே செல்ல, வர்ஷினி பாக்கியாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் பாக்கியா ரோட்டில் நின்று காய் வாங்கி கொண்டிருக்கிறார். அப்போது காய்கறி விற்பவரிடம் மாங்காய் கொண்டு வர சொல்கிறார். அக்கம் பக்கத்தினர் மருமகள் மாசமாக இருப்பதால் அவளுக்கு மாங்காய் வாங்கி கொடுக்கிறியா என கேட்கிறார். அந்த நேரம் கோபியும் ராதிகாவும் வருகின்றனர். அப்போது ராமமூர்த்தி வேண்டும் என்றே தாத்தா தாத்தா என சத்தம் போட உடனே கோபிக்கு கோவம் வருகிறது.

என்ன பிரச்சனை உங்களுக்கு என கோபி கேட்க, நான் இப்படி தான் சொல்வேன் என ராமமூர்த்தி சொல்கிறார். உடனே 25 வருஷம் என் வாழ்க்கையை கெடுத்த நீங்க தான் மோசமானவர் என கோபி சொல்ல, இருவரும் ரோட்டில் நின்று சண்டை போடுகின்றனர். அப்போது ராதிகா கோபியை உள்ளே இழுத்து செல்கிறார். பின் கோபி வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்துக் கொண்டு அப்பாவை கொல்லாமல் விடமாட்டேன் என சொல்கிறார். ஆனால் ராதிகா என்ன பண்றீங்க என சொல்லி கோபியை தடுக்கிறார். பின் இப்படி தான் என் வாழ்க்கை முழுவதும் பாடாய் படுத்தி என்னை இப்படி கஷ்டப்படுத்தி இருப்பதாக கோபி சொல்கிறார்.

ஆனால் ராதிகா கோபி சொல்வதை கேட்காமல் நாம இந்த வீட்டிற்கு வந்திருக்கவே கூடாது என சொல்கிறார். என்ன பேசுகிறாய் நீ என கோபி கேட்க ஆமாம் நாம கல்யாணமே செய்திருக்க கூடாது என சொல்லி கோவித்து கொண்டு ராதிகா ரூமிற்கு சென்று கதவை மூடிக் கொள்கிறார். கோபி என் வாழ்க்கையே இப்படி நரகம் ஆகிவிட்டதே என நினைத்து வருத்தப்படுகிறார். மறுபக்கம் ராமமூர்த்தி ஈஸ்வரியிடம் உன் தவபுதல்வனை நன்றாக செய்துவிட்டேன் என சொல்கிறார். உங்களுக்கு எதற்கு தேவை இல்லாத வேலை என ஈஸ்வரி கேட்க, பாக்கியா எல்லாரும் நின்று கொண்டிருப்பதாக சொல்கிறார். ஒரு தலைமை ஆசிரியர் போல நடந்து கொள்ளுங்கள் என சொல்ல, உன் மகனுக்கு இது தான் சரி என ராமமூர்த்தி சொல்கிறார்.

நீங்கள் பான் கார்டு அல்லது பே ஸ்லிப் இல்லாமல் தனி நபர் கடன் பெற வேண்டுமா? முழு விவரங்கள் இதோ!

மறுபக்கம் இனியாவின் நண்பர்கள் கோபி பற்றி கேட்கின்றனர். முதலில் இனியா அதை நினைத்து வருத்தப்பட ஆனால் நாம தவறு செய்யவில்லை அதனால் வருத்தப்பட வேண்டாம் என பாக்கியா சொன்னது நியாபகத்திற்கு வருகிறது. அப்போது மயூரா அங்கே வர, இனியாவின் நண்பர்கள் உன் தங்கச்சி வருவதாக சொல்கிறார்கள். மயூரா இனியாவை அக்கா என கூப்பிட, என்னை அப்படி கூப்பிட்டால் உன்னை அடித்துவிடுவேன் என இனியா சொல்கிறார். பின் டாடி தான் அப்படி கூப்பிட சொன்னதாக சொல்ல, இனியா தள்ளிவிட்டு கோபியை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே செல்கிறார். பின் வீட்டிற்கு வந்த மயூரா ராதிகாவிடம் இனியா இப்படி நடந்து கொள்ள என்ன காரணம் என கேட்க, ராதிகா அவர்களிடம் நீ பேசாதே என சொல்கிறார். பின் கோபி வர, மயூரா இனியா நடந்து கொண்டதை பற்றி சொல்கிறார். உடனே கோபி அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!