எழில் அமிர்தா காதலை தெரிந்து அதிர்ச்சி அடையும் ராமமூர்த்தி.. பாக்கியாவை தேர்தலில் நிற்க சொல்லும் பெண்கள் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகா உடன் நெருக்கமாக இருக்க நினைக்க ஆனால் அந்த நேரம் பார்த்து இனியா வருகிறார். மறுபக்கம் ராமமூர்த்தி எழில் அமிர்தா காதலை தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். பின் பாக்கியா தேர்தலில் நிற்காமல் இருப்பதால் கோபி மற்றும் பழைய செகரட்டரி நக்கல் அடிக்கின்றனர்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவிடம் இவ்வளவு அழகான மனைவியை கல்யாணம் செய்தும் இப்படி தூரமாக இருக்க வேண்டியதாக இருக்கு என பேசுகிறார். பின் இப்படி இனியா என் அப்பா என எல்லாரும் வந்து இருந்தால் பெரிய வீடாக பிடித்து இருக்கலாம் என சொல்கிறார். பின் அழகான மனைவியை காதலித்து திருமணம் செய்து கொஞ்ச நேரம் கூட உன்னுடன் பேச முடியவில்லை என சொல்லி நெருக்கமாக வருகிறார். பின் ராதிகாவை முத்தமிட வர அப்போது இனியா வந்துவிடுகிறார். உடனே ராதிகா கோபியை தள்ளிவிட கோபி கீழே விழுந்து விடுகிறார். இனியா என்னாச்சு டாடி என ஓடி வர போன் கீழே விழுந்து விட்டது என சொல்கிறார். இனியா போன் இங்கே இருக்கிறது என சொல்கிறார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
பின் ராதிகா ரூமிற்குள் போக கோபியும் செல்கிறார். ராமமூர்த்தி அவர்களை சந்தேகத்துடன் பார்க்கிறார். மறுபக்கம் பாக்கியா பேங்கில் மீண்டும் லோன் கேட்க செல்கிறார். ஆனால் அங்கே உங்க கணவர் வந்தால் தான் லோன் கிடைக்கும் என சொல்கிறார்கள். பாக்கியா எங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது என சொல்ல உடனே பேங்க் மேனேஜர் விவாகரத்து வாங்கினால் இப்படி தான் சிலர் வருவார்கள். ஆனால் அவர்களுக்கு எங்களால் லோன் கொடுக்க முடியாது என சொல்கிறார். பின் பாக்கியா செல்வி வருத்தத்துடன் வீட்டிற்கு வருகின்றனர்.
அப்போது ஈஸ்வரி எழில் அமிர்தா காதலை பற்றி ராமமூர்த்தியிடம் சொல்ல அவர் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். அப்போது எழில் வர தாத்தா அவனிடம் கேட்க செல்கிறார். ஆனால் அவர் கேட்பதற்குள் பாக்கியா வந்துவிடுகிறார். பாக்கியாவிடம் லோன் பற்றி கேட்க, லோன் கிடைக்கவில்லை என சொல்கிறார். பின் தாத்தா ஊரில் உள்ள இடங்களை விற்று பணம் கொடுக்கிறேன் என சொல்ல. ஆனால் ஈஸ்வரி அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். பாக்கியாவும் அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். மறுபக்கம் செகரட்டரி தேர்தல் வருகிறது.
அதிநவீன சோதனையால் நேர்ந்த ஆபத்து ..ஆயிரக்கணக்கான உயிர்கள் பலி – சிக்கலில் எலான் மஸ்க்!
அதில் அனைவரும் அமர்ந்திருக்க பெண்கள் தேர்தலில் நிற்பதாக சொன்னீர்கள், ஆனால் பாக்கியா மேடம் நிற்கமாட்டேன் என சொல்லிவிட்டார். யாரும் தேர்தலில் நிற்கமாட்டேன் என்றால் யாருக்கு தேர்தல் நடத்துவது என கேட்க, கோபி நக்கலாக சிரிக்கிறார். பின் மற்ற பெண்கள் பாக்கியாவிடம் ஏன் நிற்கமாட்டேன் என சொன்னாய் உன்னை நம்பி தான் நாங்க இருந்தோம் என சொல்கிறார். பின் பாக்கியா யோசித்து கொண்டிருக்க, அப்போ என் மனைவி வெற்றி பெற்றதாக அறிவிக்க போறேன் என சொல்கிறார். உடனே மற்ற பெண்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது