நன்றாக சமைத்து அசத்திய ராதிகா.. எழில் அமிர்தா காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா கோபியை சாப்பாடு சமைத்து போட்டு சந்தோஷப்படுத்த நினைக்கிறார். ராதிகா சமைக்க ஆனால் கோபி அதை எந்த ஹோட்டலில் வாங்கியதாக கேட்கிறார். அதை நினைத்து ராதிகா வருத்தப்படுகிறார். மறுபக்கம் எழிலிடம் ஈஸ்வரி அமிர்தா உடன் வெறும் நட்பு தான் என சொல்லி சத்தியம் செய்கிறார்.
பாக்கியலட்சுமி
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா நன்றாக சமைக்க வேண்டும் என நினைத்து வீடியோ பார்த்து சமைத்து போடுகிறார். அதை நன்றாக இருப்பதாக அனைவரும் சொல்வது போல நினைத்து பார்க்கிறார். உடனே அது கனவு என அறிந்து கொள்கிறார். பின் அனைவரையும் சாப்பிட வர சொல்கிறார். அனைவரும் சாப்பிட அமர அவர்களுக்கு பிரியாணியும் முட்டையும் வைக்கிறார். எல்லாரும் சாப்பிட யாரும் எதுவும் சொல்லவில்லை. பின் மயூராவிடம் சாப்பாடு நன்றாக இருக்கிறதா என கேட்க இருப்பதாக சொல்கிறார். பின் கோபியிடம் கேட்க நன்றாக இருக்கிறது எந்த ஹோட்டலில் வாங்கினாய் என கேட்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
உடனே ராதிகா முகம் சோகமாகிவிட்டது. ராமமூர்த்தி அதை எல்லாம் பார்க்கிறார். கோபி இனிமேல் இந்த ஹோட்டலில் வாங்கு என சொல்கிறார். பின் ராதிகா சோகமாக இருக்க ராமமூர்த்தி 25 வருசமாக விதவிதமாக சமைத்து போட்டவளிடம் ஒரு நாள் கூட நன்றாக இருந்ததாக சொன்னது இல்லை. நீ எதிர்பார்த்தது தவறு என சொல்கிறார். பின் ராதிகா சோகமாக அமர்ந்திருக்க கோபி வந்து ஏன் கோவமாக இருக்கிறாய் என கேட்கிறார். அப்போது கோபி யாராவது எதாவது சொன்னார்களா என கேட்க, நீங்க தான் சொன்னதாக சொல்கிறார்.
அப்போது கோபி நான் என்ன செய்தேன் என கேட்க, நான் சமைத்ததை ஹோட்டலில் வாங்கியதாக சொன்னது நீங்க தான் என சொல்கிறார். உடனே கோபி நான் தெரியாமல் சொல்லிவிட்டேன் என சொல்லி ராதிகா கையில் முத்தம் கொடுக்கிறார். இனியா அதை பார்த்து கோபத்துடன் செல்கிறார். கோபி சமாதானம் செய்ய ராதிகா சிரித்துக் கொள்கிறார்.மறுபக்கம் பாக்கியா எழிலிடம் பேசிக் கொண்டிருக்க அப்போது ஜெனி வருகிறார். செழியன் பாட்டியிடம் அமிர்தா எழில் பற்றி சொன்னதாக ஜெனி சொல்ல பாக்கியாவும், எழிலும் அதிர்ச்சி அடைகின்றனர். பின் ஈஸ்வரிக்கு பாக்கியா மாத்திரை கொடுக்க, ராமமூர்த்தியை பற்றி ஈஸ்வரி கவலைப்படுகிறார்.
தமிழகத்தில் புது பொலிவு பெறும் ரேஷன் கடைகள் – அதிகாரி வெளியிட்ட சூப்பரான தகவல்!!
அப்போது பாக்கியா அவருக்கு எதுவும் ஆகாது என சொல்ல, உடனே எழில் அங்கே வருகிறார். அப்போது ஈஸ்வரி எதையோ பறிகொடுத்த மாதிரி ஏன் இருக்கிறாய் என கேட்கிறார். அப்போது ஈஸ்வரி உனக்கு எதாவது பிரச்சனை இருக்கிறதா என கேட்க பாக்கியா எதுவும் இல்லை என சொல்கிறார். பின் ஈஸ்வரி உனக்கும் அமிர்தாவிற்கும் என்ன சம்மந்தம் என கேட்க, எதுவும் இல்லை என பாக்கியா சொல்கிறார்.பின் செழியன் என்னென்னமோ சொல்கிறான் அதெல்லாம் கேட்டால் எனக்கு பயமாக இருப்பதாக ஈஸ்வரி சொல்கிறார். உனக்கும் அமிர்தாவிற்கும் இடையே எதுவும் இருக்க கூடாது என ஈஸ்வரி சொல்கிறார். மேலும் தனது தலையில் கை வைத்து சத்தியம் வாங்க எழில் மற்றும் பாக்கியா அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.