கோபி வீட்டிற்கு மீண்டும் சென்ற இனியா.. செகரட்டரி தேர்தலில் நிற்க போகும் பாக்கியா – இன்றைய எபிசோட்!

0
கோபி வீட்டிற்கு மீண்டும் சென்ற இனியா.. செகரட்டரி தேர்தலில் நிற்க போகும் பாக்கியா - இன்றைய எபிசோட்!
கோபி வீட்டிற்கு மீண்டும் சென்ற இனியா.. செகரட்டரி தேர்தலில் நிற்க போகும் பாக்கியா - இன்றைய எபிசோட்!
கோபி வீட்டிற்கு மீண்டும் சென்ற இனியா.. செகரட்டரி தேர்தலில் நிற்க போகும் பாக்கியா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா கோபி வீட்டிற்கு மீண்டும் கிளம்ப உடனே பாக்கியாவும் ஈஸ்வரியும் அதை நினைத்து வருத்தப்படுகின்றனர். மறுபக்கம் கோபி இனியா வந்ததை நினைத்து சந்தோசப்படுகிறார். பின் பாக்கியா செகரட்டரியிடம் சண்டை போட உடனே பாக்கியா செகரட்டரி பதவிக்கு போட்டியிடுவார் என செல்வி சொல்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி இனியா அங்கே சென்றதை நினைத்து கோவமாக இருக்கிறார். உடனே ராதிகா அவரை முறைத்து பார்க்க, இனியாவை நான் சென்று கூட்டிக் கொண்டு வருவேன் என் மகள் இருக்கும் இடத்தில் தான் நான் இருப்பேன் என சத்தமாக பேசுகிறார். உடனே மயூரா பயப்பட, ராதிகா பயப்படாமல் இரு என சொல்கிறார். மறுபக்கம் இனியா நான் கிளம்புறேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். பாக்கியா ஈஸ்வரி இனியா போனதை நினைத்து அழ, ராமமூர்த்தி நான் இருக்கிறேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். இனியா வீட்டிற்கு வந்ததை பார்த்து கோபி எங்கே சென்றாய் என கேட்க, ட்ரெஸ் எடுக்க சென்றதாக இனியா சொல்கிறார்.

Follow our Instagram for more Latest Updates

பின் ராதிகா கோபியை முறைத்து கொண்டு உள்ளே செல்கிறார். ராமமூர்த்தி அதை எல்லாம் பார்க்கிறார். பின் அசோசியேசன் மீட்டிங் நடைபெறுகிறது. அதில் ராமமூர்த்தி பாக்கியா என அனைவரும் வருகின்றனர். செகரட்டரி வர அனைவரும் அவரிடம் புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் செகரட்டரி பொறுப்பில்லாமல் பேசுகிறார். ராமமூர்த்தி அவங்க கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்க என சொல்கிறார். பின் அவர் என்னால் எல்லா வேலையும் செய்ய முடியவில்லை என சொல்ல, உடனே பாக்கியா வேலை செய்ய முடியவில்லை என்றால் ஆட்களை வைத்து வேலை செய்யுங்கள் என சொல்கிறார். ஆனால் சம்பளம் கொடுக்க முடியாது என செகரட்டரி சொல்கிறார்.

தமிழ் மொழி திறனறிவு தேர்வில் 2.50 லட்சம் பேர் தேர்ச்சி-  மாதம் ரூ.1,500 ஊக்கதொகை!

செகரட்டரியை மாற்றினால் தான் சரியாக வரும் என அனைவரும் சொல்ல, இந்த முறை பெண்கள் யாரவது நின்றால் தான் சரியாக வரும் என அனைவரும் பேசுகின்றனர். பின் எல்லாரும் செகரட்டரி மாற்ற வேண்டும் என சொல்ல, யார் நிக்க போறீங்க என செகரட்டரி கேட்கிறார். உடனே செல்வி பாக்கியா தேர்தலில் பாக்கியா அக்கா நிற்பார் என சொல்கிறார். பாக்கியா வேண்டாம் என சொல்ல மற்ற பெண்கள் பாக்கியாவிற்கு ஆதரவாக இருக்கிறார். பழைய செகரட்டரி எல்லா இடங்களிலும் சமையல் செய்பவருக்கு என்ன தெரியும் என கேட்க, உடனே செல்வி செகரட்டரியிடம் உங்களால் வேலை செய்ய முடியவில்லை என என் அக்கா செய்வார் என சொல்கிறார். பின் ராமமூர்த்தி ஆதரவாக இருக்க செல்வியும் கண்டிப்பாக பாக்கியா தேர்தலில் நிற்பார் என சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!