தேர்தலில் வெற்றி பெற்ற பாக்கியா.. கொண்டாடும் குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!

0
தேர்தலில் வெற்றி பெற்ற பாக்கியா.. கொண்டாடும் குடும்பத்தினர் - இன்றைய எபிசோட்!
தேர்தலில் வெற்றி பெற்ற பாக்கியா.. கொண்டாடும் குடும்பத்தினர் - இன்றைய எபிசோட்!
தேர்தலில் வெற்றி பெற்ற பாக்கியா.. கொண்டாடும் குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” எபிசோடில் கோபி வீட்டில் இருந்து கொண்டு ராமமூர்த்தி பாக்கியாவிற்கு ஆதரவாக இருக்க உடனே கோபி சண்டை போடுகிறார். மறுபக்கம் ராஜசேகர் சார் உதவி செய்ய பாக்கியாவிற்கு லோன் கிடைக்கிறது. பின் பாக்கியா தேர்தலில் வெற்றி பெற குடும்பத்தினர் சந்தோசமாக இருக்கின்றனர்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி வீட்டில் அமர்ந்து கொண்டு ராமமூர்த்தி பாக்கியாவிற்கு ஆதரவாக வேலைகளை செய்கிறார். உடனே கோபி ராமமூர்த்தியிடம் சண்டை போடுகிறார். நான் எங்க இருந்தாலும் என் மருமகளுக்கு நான் ஆதரவாக தான் இருப்பேன் என ராமமூர்த்தி சொல்ல, உடனே கோபி ராதிகா தான் தேர்தலில் வெற்றி பெறுவாள் இங்கே இருந்து கொண்டு இந்த வேலை எல்லாம் செய்ய வேண்டாம் என கோபி சொல்கிறார். பின் கோபி சென்ற பின் இனியா பாக்கியாவிற்கு ஆதரவாக பேசுகிறார். உடனே ராதிகா உன் அப்பா இருக்கும் போது அவருக்கு ஆதரவாக பேசினாய் என சொல்ல, பின் இனியா நான் என் அப்பாவிற்கும் என் அம்மாவிற்கும் ஆதரவாக எப்போதும் இருப்பேன் என சொல்கிறார்.

Follow our Twitter Page for More Latest News Updates

மறுபக்கம் பாக்கியா ராஜசேகர் சாரை பார்க்க செல்கிறார். அப்போது பாக்கியா என்னால் கேட்டரிங் ஆர்டரை செய்ய முடியாது என சொல்ல, உடனே ராஜசேகர் ஏன் என கேட்கிறார். அப்போது பாக்கியா எனக்கு அவ்வளவு பணம் ஏற்பாடு செய்ய முடியவில்லை என சொல்ல, உடனே ராஜசேகர் நான் உதவி செய்கிறேன் என சொல்கிறார். அதை கேட்டு பாக்கியா சந்தோசப்படுகிறார். மறுபக்கம் பாக்கியா ராதிகா என அனைவரும் வந்திருக்க அப்போது தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் கனமழை கொட்டித்தீர்க்கும் – 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

அந்த நேரம் எழில், செழியன், ஜெனி, ஈஸ்வரி என அனைவரும் பாக்கியாவிற்கு ஆதரவாக இருக்கின்றனர். அப்போது கோபி ராதிகா வர, அவர்களை பார்த்து ஈஸ்வரி கோபப்படுகிறார். பின் பழைய செகரட்டரி பேசிக் கொண்டிருக்க, அப்போது பார்த்து எழில் வந்து தேர்தலை துவக்கி வைக்கிறார். தேர்தலில் அனைவரும் வாக்கு அளிக்கின்றனர். பின் வாக்குகள் எண்ண படுகிறது. முதலில் ராதிகா 100க்கு அதிகமான வாக்குகள் பெற்றதாக அறிவிக்கப்படுகின்றன. அதன் பின் பாக்கியாவிற்கு 1000க்கு அதிகமான வாக்குகள் கிடைக்கிறது. உடனே எழில் செழியன் என அனைவரும் அதை பார்த்து சந்தோசப்படுகின்றனர். பாக்கியா வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார். பின் பாக்கியாவை பேச சொல்லி ராமமூர்த்தி அழைக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!