“பாக்கியலட்சுமி” சீரியலில் விலகியுள்ள முக்கிய கதாபாத்திரம் – காரணமா இதுவா? ரசிகர்கள் கவலை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரித்திகா திருமணத்திற்கு பின் சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா என்பது குறித்து ரசிகர்களின் கேள்விகளுக்கு தற்போது விளக்கம் கிடைத்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி சீரியல்:
பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த கதையில் முக்கியமான அமிர்தா கதாபாத்திரத்தில் நடிகை ரித்திகா நடித்து வருகிறார். அவர் பாக்கியாவின் இரண்டாவது மகன் எழிலின் காதலியாக நடித்து வருகிறார். எழில் காதலில் ஏகப்பட்ட சிக்கல் இருக்கும் நிலையில் அவர் யாரை திருமணம் செய்வார் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இந்நிலையில் அமிர்தாவாக நடித்து வரும் ரித்திகாவிற்கு சில நாட்களுக்கு முன் திருமணம் முடிந்தது.
Exams Daily Mobile App Download
அவர் தனது கணவருடன் தற்போது தேனிலவுக்கு மாலத்தீவு சென்று இருக்கிறார். அதனால் இன்னும் ஷூட்டிங் வராமல் இருப்பதால், இன்னும் எபிசோடுகளில் அமிர்தா கதாபாத்திரம் காட்டப்படாமல் இருக்கிறது. அதனால் அவர் தொடர்ந்து சீரியலில் நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில் அவர் கட்டாயம் அமிர்தவாக தொடர்ந்து நடிப்பார் என்ற விளக்கம் தற்போது கிடைத்துள்ளது. இருப்பினும் குறுகிய காலத்திற்கு மட்டும் ரித்திகா சின்னத்திரைக்கு பிரேக் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.