கோபியுடன் சென்ற இனியா.. ராமமூர்த்தி எடுத்த அதிரடி முடிவு.. சிக்கலில் ராதிகா – அதிரடி திருப்பம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கதைக்களம் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இனியா கோபியுடன் ராதிகா வீட்டிற்கு சென்றுவிட, கோபியே எதிர்பாராத ட்விஸ்ட் ஒன்று வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் கதைக்களம் வேகமாக நகர்ந்து வருவதால் மக்களுக்கு விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இனியா ஸ்கூலில் பிரச்சனை ஒன்று வர பாக்கியாவிடம் சொல்ல பயப்பட்டு கோபியின் உதவியை கேட்கிறார் இனியா. கோபியும் உதவி செய்ய, அந்த விஷயம் பாக்கியாவிற்கு தெரிய வருகிறது. அதனால் பாக்கியா பயங்கரமாக கோவப்பட்டு இனியாவை அடித்துவிடுகிறார். மேலும் ஈஸ்வரி செழியன் என அனைவரும் திட்டுகின்றனர்.
Follow our Twitter Page for More Latest News Updates
அதனால் இனியா வீட்டை விட்டு போக வெளியே கோபி நிற்கிறார். உங்களை ஸ்கூலிற்கு கூப்பிட்டதால் எல்லாரும் என்னை அடிப்பதாக சொல்ல, உடனே கோபி வீட்டிற்கு வந்து நியாயம் கேட்கிறார். அப்போது கோபி இனியா ஆசைப்பட்டால் நான் அவளை என்னுடன் அழைத்து செல்வேன் என சொல்ல, உடனே இனியாவும் கோபி உடன் வர சம்மதிக்கிறார். இந்நிலையில் இனியாவை கூட்டி கொண்டு வர சொல்லி ஈஸ்வரி வருத்தப்பட்டு பேச, ராமமூர்த்தி பையுடன் கிளம்பி செல்கிறார்.
Exams Daily Mobile App Download
எங்கே போறீங்க என ஈஸ்வரி கேட்க,இனிமேல் என் பேத்தி இருக்கும் இடத்தில் தான் நான் இருப்பேன் என நேராக கோபி வீட்டிற்கு செல்கிறார். அங்கே கோபி இனியாவை கூட்டி கொண்டு போக வந்திருக்கீங்களா இனிமேல் அவளை அனுப்ப முடியாது. அவள் இங்கே தான் இருப்பாள் என சொல்கிறார். உடனே ராமமூர்த்தி என் பேத்தி இங்கே தான் இருப்பாள் என்றால் நானும் இங்கே தான் இருப்பேன் என சொல்கிறார். அதை கேட்டு கோபி மற்றும் ராதிகா அதிர்ச்சி அடைகின்றனர்.