கோபி ராதிகாவை வம்பிழுக்கும் கண்ணன் ஐஸ்வர்யா, லாபத்தை நினைத்து சந்தோசப்படும் முல்லை – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” மற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், பாக்கியாவை சந்தோஷப்படுத்த அனைவரும் நடனம் ஆடி சந்தோசமாக இருக்கின்றனர். ஆனால் ராதிகா கோபி மீது கோவமாக இருக்க, வெளியே வந்து ஆடல் பாடல் நடக்கும் இடத்தில் அமருகின்றனர்.
மகா சங்கமம்:
இன்று “மகா சங்கமம்” சீரியலில் கோபி ராதிகாவை அவங்க பேசியதை பற்றி நினைக்காமல் சந்தோசமாக இருக்க சொல்கிறார். அவங்க யாரும் உன் அருகே வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். அந்த பக்கமாக ஐஸ்வர்யாவும் கண்ணனும் வர, கண்ணன் கோபி ரூமை காட்டுகிறார். ஐஸ்வர்யா இதெல்லாம் என்னால் நம்பவே முடியவில்லை என சொல்ல, பேசாமல் அவர்களை தொல்லை செய்வோம் என சொல்கிறார். பின் கோபி ராதிகாவை சமாதானம் செய்ய, ஆனால் கண்ணனும் ஐஸ்வர்யாவும் கதவை தட்டுகின்றனர். கோபி கதவை திறக்க, உள்ளே வந்த அவர்கள் இது எங்களுடைய ரூம் என சொல்கிறார்
கோபி இது எங்க ரூம் என சொல்ல, இங்கே எங்களுடைய பொருள்கள் தான் இருக்கிறது என சொல்ல, உடனே கண்ணன் இது எங்க ரூம் என சொல்கிறார். ராதிகா அதை கேட்டு கோவப்படுகிறார். கோபி வெளியே போக சொல்ல, கண்ணன் ஆமாம் ஐசு இது நம்ம ரூம் இல்லை என சொல்லி வெளியே செல்கின்றனர். கண்ணனும் ஐஸ்வர்யாவும் வெளியே வந்து அவர்களை கிண்டல் செய்ததை நினைத்து சந்தோசப்படுகின்றனர். மறுபக்கம் மீனா ஜீவாவிற்கு போன் செய்து எங்கே இருக்கிறாய் என கேட்க, நான் கடையில் இருக்கேன் என ஜீவா சொல்கிறார். உடனே மீனா கோவமாக போனை வைக்க ஜீவா வாசலில் இருந்து வருகிறார்.
உன்னிடம் சும்மா விளையாடியதாக ஜீவா சொல்ல, கடையில் இருந்து புரோட்டா வாங்கி வந்து மீனாவிற்கு கொடுக்கிறார். மீனா அதை பார்த்து சந்தோசப்படுகிறார். மீனாவும் ஜீவாவும் சந்தோசமாக சாப்பிடுகின்றனர். மறுபக்கம் மூர்த்தி குடும்பத்துடன் சேர்ந்து பாக்கியா குடும்பம் பாடலுக்கு நடனம் ஆடி சந்தோசப்படுகின்றனர். அப்போது எழில் ஆடி முடித்துவிட்டு மூர்த்தியை ஆட சொல்ல, தனம் வந்தால் தான் ஆடுவேன் என மூர்த்தி சொல்கிறார். உடனே தனம் ஆட வர இருவரும் சந்தோசமாக ஆடி காட்டுகின்றனர். அதை பார்த்து பாக்கியாவும் சந்தோசப்படுகிறார்.
மறுபக்கம் முல்லை கடை லாபத்தை பார்த்து சந்தோசப்பட, கதிரை அழைத்து நேற்று போல இன்னைக்கும் லாபம் வந்துள்ளதாக சொல்கிறார். கதிர் அதனால் என்ன என கேட்க, அந்த மல்லி எவ்வளவு பேசினால் என முல்லை சொல்கிறார். கதிர் சந்தோஷமாக இருக்கும் போது அடுத்தவர்களை குறை சொல்ல வேண்டாம் என சொல்ல, முல்லை சரி என சொல்கிறார். பின் ராதிகா கோபி மீது பயங்கர கோவத்தில் இருக்க,கோபி சமாதானம் செய்ய வெளியே அழைத்து செல்கிறார். ராதிகா வேண்டாம் என சொல்ல, ஆனால் கோபி வா என கூட்டி செல்கிறார்.
இந்த ‘ ஆப் மூலமாக வீடியோ கால் செய்கிறீர்களா? – அரசின் எச்சரிக்கை! நிறுவனத்தின் விளக்கம்!
வெளியே மூர்த்தி மிமிக்கிரி செய்து காட்டி எல்லாரையும் சந்தோசப்படுத்துகிறார். அனைவரும் சிரித்துக் கொண்டிருக்க, அப்போது ராதிகாவும் கோபியும் வருகின்றனர். எல்லாரும் சிரித்து பேசிக் கொண்டிருக்க, கோபி வா போகலாம் என சொல்கிறார். ஆனால் ராதிகா இங்கே தான் இருக்க வேண்டும் என சொல்லி, அவர்கள் சிரித்து கொண்டிருக்கும் போது அங்கே வந்து அமர்கின்றனர். எல்லாரும் ராதிகா கோபியை பார்த்து அமைதியாக இருக்க, ஐஸ்வர்யா அடுத்து பாடல் போட்டி என சொல்லி பாக்கியாவை பாட சொல்கிறார். பெரிய பாடகி என கோபி பாக்கியா மீது வெறுப்பை காட்டுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்