தேர்தல் களத்தில் கோபியின் சதிச்செயல்.. ராதிகாவிடம் தோற்ற பாக்கியா – சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா தேர்தலில் நிற்க, அவருக்கு போட்டியாக கோபி ராதிகாவை நிற்க சொல்கிறார். நான் படித்திருக்கேன் என்பதை காரணமாக வைத்து ராதிகாவும் கோபியும் வாக்கு கேட்க, அதனால் பாக்கியாவிற்கு வெற்றி கிடைக்குமா என்பதே சீரியலில் ட்விஸ்டாக இருக்க போகிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பான காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் கதை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாக்கியா தொழிலில் முன்னேற வேண்டும் என ஒரு பக்கம் போராடி வர, மறுபக்கம் அவரை அசிங்கப்படுத்த கோபி பல வேலைகளை செய்து வருகிறார். அதனால் கோபி முன் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என நினைத்து பாக்கியா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது ஏரியா செகரட்டரி தேர்தலில் பாக்கியா போட்டி போட இருக்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
அதை சொல்லி கோபி கிண்டல் செய்ய, உடனே ராமமூர்த்தி நீ தேர்தலில் நின்று ஜெயித்து காட்டு என கோபியிடம் சவால் விடுகிறார். உடனே கோபி ராதிகாவை பாக்கியாவிற்கு போட்டியாக நிற்க சொல்கிறார். ராதிகாவும் ஒப்புக் கொள்ள, நாங்க படித்தவர்கள் அலுவலக நிர்வாகம் பார்த்தவர்கள் என சொல்லி கோபியும் ராதிகாவும் வாக்கு கேட்கின்றனர். அதனால் பாக்கியாவிற்கு அவமானமாக இருக்கிறது. இதையே காரணமாக வைத்து கோபிக்கு வாக்களித்து ராதிகா வெற்றி பெறுவாரா? அல்லது பாக்கியாவின் நல்ல குணத்திற்கு வாக்குகள் கிடைக்குமா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
தமிழகத்தில் இருந்து காசி செல்வது இனி ரொம்ப ஈஸி – மத்திய அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
எப்படியும் பாக்கியா தான் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இருந்தாலும், கோபி சதி செய்து, பாக்கியா கணவருடன் வாழ முடியவில்லை, ஏரியாவை எப்படி கவனித்து கொள்வாள் என ஆண்களிடம் பேசி வாக்குகளை வாங்க இருக்கிறார். அதனால் பாக்கியாவிற்கு வாக்குகள் குறைந்து அவர் தோல்வியை தழுவுவாரா என்பது எல்லாம் அடுத்து வரும் ட்விஸ்ட்டாக இருக்க போகிறது.