கோபியை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளும் ராதிகா, விரக்தியில் பாக்கியா – ‘பாக்கியலட்சுமி’ புதிய திருப்பங்கள்!

0
கோபியை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளும் ராதிகா, விரக்தியில் பாக்கியா - 'பாக்கியலட்சுமி' புதிய திருப்பங்கள்!
கோபியை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளும் ராதிகா, விரக்தியில் பாக்கியா - 'பாக்கியலட்சுமி' புதிய திருப்பங்கள்!
கோபியை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளும் ராதிகா, விரக்தியில் பாக்கியா – ‘பாக்கியலட்சுமி’ புதிய திருப்பங்கள்!

கோபியை பாக்கியா வீட்டை விட்டு வெளியேற சொன்னதும் ராதிகாவை சென்று கோபி சந்திக்கிறார். அப்போது, ராதிகா மனசு மாறி கோபியை மனதார ஏற்றுக்கொள்ளும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் வந்தபடியே தான் இருந்து வருகிறது. அதாவது, கோபிக்கும் ராதிகாவுக்கு தொடர்பு இருக்கிறது என்கிற உண்மை தெரிய வந்ததும் கோபியை விட்டு விலக வேண்டும் என பாக்கியா முடிவெடுத்துவிட்டார். குடும்பத்தில் உள்ள அனைவரும் விவாகரத்து செய்ய வேண்டாம் என பாக்கியாவை தடுத்தும் கூட பாக்கியா கேட்பதாக இல்லை. பிடிக்காத ஒருவருடன் ஒரு நிமிடம் கூட சேர்ந்து வாழ கூடாது என கோபிக்கு விவாகரத்து கொடுத்துவிட்டார்.

பாக்கியாவின் செய்கை கோபிக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடும்பத்திற்கே ஆச்சரியமாக இருந்தது. மேலும், பாக்கியா கோபியின் துணிமணிகள் அனைத்தையும் பேக் செய்துவைத்து வீட்டை விட்டு வெளியே கிளம்புங்கள் என கோபியிடம் கூறுகிறார். மேலும், எந்த தவறும் செய்யாத நான் ஏன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும், இது என் குடும்பம் தற்போது நீங்கள் தான் வெளியேற வேண்டும் என கோபியிடம் பாக்கியா கறாராக கூறிவிட்டார். எப்படியும் வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவார்கள் என்கிற பயத்தில் கோபி இந்த வீட்டை நான் பார்த்து பார்த்து கட்டியிருக்கேன். அதனால், இந்த வீட்டிற்காக செலவு செய்த பணத்தை கொடு என பாக்கியாவிடம் கேட்கிறார்.

இந்தியாவில் ஒரே நாளில் 12,608 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை ஷாக் அறிக்கை!

அதற்கும் பாக்கியா சற்றும் தயங்காமல் நான் உங்களுக்கு 40 லட்சம் கொடுக்கிறேன். இப்பொழுதே வீட்டை விட்டு கிளம்புங்கள் என பாக்கியா கூறிவிடுகிறார். இதற்கு பிறகு கோபி என்ன செய்ய போகிறார் என எதிர்பார்த்த நேரத்தில் நேராக ராதிகாவின் வீட்டிற்கு கோபி கிளம்பி செல்கிறார். அங்கு நடந்த அனைத்து விஷயங்களையும் ராதிகாவிடம் கூற ராதிகாவும் கோபி மீது இறக்கப்படுகிறார். பின்னர், கோபிக்கு இனிமேல் நான் இருக்கிறேன் என ராதிகாவின் வீட்டிலேயே கோபியை தங்க வைக்க நினைக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!