இனியாவால் ராதிகா வீட்டில் பிரச்சனை செய்த பாக்கியா – சீரியலில் அடுத்து வரும் தரமான சம்பவம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் இனியாவிற்கு விபத்து ஏற்பட்டு இருப்பதால் அவளை அழைத்து கொண்டு கோபி வீட்டிற்கு சென்றுவிடுகிறார். அப்போது இனியாவிற்கு என்ன ஆச்சு என பதட்டத்துடன் பாக்கியா ராதிகா வீட்டிற்கு வருகிறார். இது குறித்து நாளை எபிசோடில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் கதை சென்று கொண்டிருக்கிறது. இனியா பாக்கியாவிடம் கோவித்து கொண்டு கோபியுடன் ராதிகா வீட்டிற்கு வந்துவிடுகிறார். அதனால் பாக்கியா வருத்தத்துடன் இருக்க, இனியாவிற்கு அம்மா நியாபகம் வருகிறது. ஆனால் இனியாவை போக விடாமல் கோபி தடுத்து வைத்து இருக்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் இனியா டூர் சென்ற பஸ் விபத்தில் சிக்கி இருக்கிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அந்த விசயத்தை கேட்டு பாக்கியா பதறி ஸ்கூலில் சென்று பார்க்கிறார். ஆனால் அதற்கு முன்னதாகவே கோபி இனியா ஸ்கூலிற்கு வந்து இனியாவை அழைத்து கொண்டு வீட்டிற்கு செல்கிறார். இனியாவை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என பாக்கியா ராதிகா வீட்டிற்கு செல்கிறார். அங்கே இனியாவை பார்க்க வேண்டும் என சொல்ல, கோபி இனியா என்னுடைய மகள் அவளை நீ எதற்கு பார்க்க வேண்டும் என கேட்கிறார். இனியாவை பார்க்காமல் நான் இங்கே இருந்து போகமாட்டேன் என பாக்கியா பிரச்சனை செய்கிறார்.
அப்போ இனி இவரை தமிழ் சீரியல்ல பார்க்க முடியாதா – ரசிகர்களுக்கு டாடா காட்டிய சின்னத்திரை நடிகர்!
Exams Daily Mobile App Download
மேலும் அடுத்து வரும் எபிசோடில் பாக்கியா பிரச்சனை செய்ய ராதிகா வந்து என்னுடைய வீட்டில் ஏன் பிரச்சனை செய்வதாக கேட்கிறார். அப்போது பாக்கியா என்னுடைய மகள் விசயத்தில் தலையிட நீ யார் என கேட்க, இப்படியே பிரச்சனை பெரிதாக இருக்கிறது. அதெல்லாம் நாளை வர இருக்கும் எபிசோடில் வர இருக்கிறது.