ஈஸ்வரியை எதிர்க்கும் பாக்கியா.. கதையில் வரும் ட்விஸ்ட் – “பாக்கியலட்சுமி” அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவை வீட்டை விட்டு வெளியேற்ற கோபி 20 லட்சம் கொடுக்க வேண்டும் என சவால் விடுகிறார். அதை நிறைவேற்ற நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்க்கிறார். அது ஈஸ்வரிக்கு பிடிக்காமல் இருக்க, உடனே பாக்கியா அவருக்கு பதிலடி கொடுக்க இருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல் கதை மிகவும் வேகமாக பல திருப்பங்களுடன் நகர்ந்து வருகிறது. இந்த சீரியலில் பாக்கியாவை வீட்டை விட்டு கோபி வெளியே அனுப்ப நினைத்து 20 லட்சம் கொடுக்க சொல்லி சவால் விடுகிறார். அதை பாக்கியா ஏற்றுக் கொள்ள, சவாலில் ஜெயிக்க வேண்டும், குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் நிறைய சமையல் ஆர்டர் எடுத்து பார்க்கிறார். ஒரு வாரம் தொடர்ந்து மண்டபத்தில் கல்யாணம் இருப்பதாக அந்த ஆர்டர் பாக்கியாவிற்கு கிடைக்கிறது.
புது சீரியலில் கமிட்டான சன் டிவி டாப் சீரியல் நடிகை – ரசிகர்கள் வாழ்த்து மழை!
Follow our Instagram for more Latest Updates
அதனால் பாக்கியாவால் ஈஸ்வரியை கவனித்து கொள்ள முடியவில்லை. ஈஸ்வரிக்கு தேவையானதை அமிர்தாவை பார்க்க சொல்ல, உடனே ஈஸ்வரிக்கு பயங்கர கோவம் வருகிறது. அதனால் அவர் பாக்கியாவிடம் சண்டை போட இருக்கிறார். நீ செய்வது எதுவும் எனக்கு பிடிக்கவில்லை என சொல்ல, உடனே கோவப்பட்ட பாக்கியா முதன்முறையாக ஈஸ்வரியை எதிர்த்து பேசுகிறார். அவர் உங்க பையனால் தான் நான் இந்த நிலைமையில் இருக்கிறேன் என சொல்ல, ஈஸ்வரி வாயடைத்து நிற்கிறார். இதெல்லாம் அடுத்து வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
Exams Daily Mobile App Download