இனியாவின் திட்டத்தால் கோபி, ராதிகா இடையே ஏற்படும் விரிசல் – கசந்து போன காதல் திருமணம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா கோபி வாழ்க்கையில் பல திருப்பங்கள் வந்து தற்போது கதையே வேறு கோணத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடில் ராதிகாவும் பாக்கியாவும் Secretary பதவிக்கு நடைபெறும் தேர்தலில் போட்டி போட இருக்கின்றனர்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலின் கதையே மாறி பாக்கியாவை புரட்சி பெண் போல காட்டி வருகின்றனர். இடை இடையே பாக்கியாவின் சோகமான முகமும் வந்து போகிறது. மேலும் பாக்கியாவிடம் சண்டை போட்டுவிட்டு இனியா கோபி உடன் சென்ற நிலையில் ஆனால் இனியாவின் திட்டமே வேற என்பது உறுதியாக தெரிகிறது. ராதிகாவிடம் எப்படியாவது என் அப்பாவை உங்களிடம் இருந்து பிரித்து எங்க வீட்டிற்கு கூட்டிக் கொண்டு செல்வேன் என இனியா உறுதியாக சொல்கிறாள்.
சினிமாவில் அதுவும் கதாநாயகியாக களமிறங்கிய விஜய் டிவி பிக்பாஸ் பிரபலம் – ரசிகர்கள் வாழ்த்து!
Exams Daily Mobile App Download
இனி வரும் எபிசோடில் இனியா கோபியை ராதிகாவிடம் இருந்து பிரிக்க பல வேலைகளை செய்ய இருக்கிறார். அதனால் கோபிக்கு ராதிகா மீது கோவம் வர இருக்கிறது. அதனால் இருவருக்கும் இடையே விரிசல் வர இருக்கிறது. மேலும் சீரியலில் பெரிய திருப்பமாக பாக்கியா செகரட்டரி பதிவிக்கு நடக்க இருக்கும் தேர்தலில் நிற்க போகிறார். ஆனால் அப்போது படிக்காத பெண் பாக்கியாவே தேர்தலில் நிற்கும் போது நீ ஏன் நிற்க கூடாது என கேட்டு, கோபி ராதிகாவையும் நிற்க சொல்கிறார். இதெல்லாம் அடுத்து வரும் எபிசோடில் வர இருக்கிறது.