கோபியை திருமணம் செய்ய மறுக்கும் ராதிகா, நிம்மதியில் பாக்கியா – ‘பாக்கியலட்சுமி’ ட்விஸ்ட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தற்போது யாருமே எதிர்பாராத திருப்பமாக ராதிகா கோபியை திருமணம் செய்து கொள்ள முதன் முறையாக மறுத்து பேசுகிறார். இதனால் கோபி எந்த மனநிலைக்கு ஆளாவர்? அவரது நிலை என்னவாகும்? என்பதனை இனி வரும் எபிசோட்களில் தான் தெரிய வரும்.
பாக்கியலட்சுமி சீரியல்
தமிழ் ரசிகர்களுக்கு எப்போதுமே சீரியல்கள் என்றால் தனி பிரியம் தான். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று தான் கூற வேண்டும். அதிலும் தற்போது பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில், ராதிகா மற்றும் கோபி இருவர் பற்றியும் பாக்கியா தெரிந்து கொண்டு என்றும் இல்லாததாக தனது வாழ்க்கையில் முதன் முறையாக கோபி மீது கோபப்படுகிறார்.
அவரது விருப்பப்படியே விவாகரத்தும் தந்து விடுகிறார். இதனை எதிர்பார்க்காத கோபிக்கு ராதிகாவுடன் சேருவதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்து விடுகிறது. பாக்கியா தன்னை எதிர்த்து பேசியதனை நினைத்து கோபி கோபப்பட்டாலும், அவருக்கு பாக்கியாவிடம் இருந்து விடுதலை கிடைத்தது மகிழ்ச்சியையே ஏற்படுத்தியது. எப்படியாவது ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், இதற்கு எதிர்மறையாக கோபியின் அம்மா ஈஸ்வரி ராதிகாவின் வீட்டிற்கு சென்று பெரிய களேபரத்தை ஏற்படுத்தி விடுகிறார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் வீரியமடையும் கொரோனா – WHO எச்சரிக்கை!
இதனால் ராதிகா மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் அனைவரும் கோபி மீது கோபத்தில் இருக்கின்றனர். ராதிகாவின் அம்மாவும் ராதிகாவிடம் கோபி மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றியும் தப்பாக கூறுகிறார். இத்தனை நாட்களாக கோபி மீது அளப்பரிய நம்பிக்கை வைத்திருக்கும் ராதிகா, தான் கோபியுடன் பேசியது தவறோ என்று யோசிக்கிறார். அதன் எதிரொலியாக கோபி வந்து திருமணம் பற்றி பேசும் போது மறுத்து விடுகிறார். இனி வரும் நாட்களில் இது போன்று தான் கதை களம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்