கோபி செய்த படுகேவலமான செயல்.. தலையில் அடித்து அழும் பாக்கியா – அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியாவிற்கு ஸ்கூலில் விபத்து ஏற்பட்டு விட, பாக்கியா இனியாவை தேடி ஸ்கூலிற்கு போகிறார். ஆனால் கோபி இனியாவை வீட்டிற்கு அழைத்து வருகிறார். இந்நிலையில் இனியாவை பார்க்க முடியாமல் பாக்கியா கதறி அழுகிறார். அதெல்லாம் இனி வரும் எபிசோடில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில், இனியா பாக்கியாவிடம் கோவித்து கொண்டு கோபி வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில், இனியா ஸ்கூலில் டூர் அழைத்து செல்கின்றனர். அப்போது இனியாவிற்கு விபத்து ஏற்பட்டதாக போன் வருகிறது. அதனால் கோபி ஒரு பக்கம் ஸ்கூலிற்கு கிளம்ப, மறுபக்கம் பாக்கியாவும் இனியாவை பார்க்க ஸ்கூலிற்கு வருகிறார். அப்போது இனியாவை பாக்கியா கண்ணில் படாமல் கோபி வீட்டிற்கு அழைத்து வருகிறார். பாக்கியா எப்படியாவது இனியாவை பார்க்க வேண்டும் என்பதால் ராதிகா வீட்டிற்கு செல்கிறார்.
எதிர்நீச்சல் சீரியல் குணசேகரனின் உண்மையான குடும்பமா இது – பார்த்து அசந்து போன ரசிகர்கள்!
Exams Daily Mobile App Download
அங்கே கோபி என்னுடைய மகளை நீ பார்க்க முடியாது என சொல்லி பயங்கரமாக பாக்கியாவை அவமானப்படுத்துகிறார். அப்போது பாக்கியா நான் இனியாவை பார்க்காமல் போகமாட்டேன் என சொல்ல, உடனே கோபி வெளியே போறியா இல்லை கழுத்தை பிடித்து வெளியே தள்ளவா என கேட்கிறார். உடனே பாக்கியா வேறு வழியில்லாமல் அழுது கொண்டே வீட்டிற்கு வருகிறார். கோபியின் இந்த கேவலமான செயலை பார்த்து ராதிகாவே அதிர்ச்சி அடைகிறார். இதெல்லாம் இன்றைய எபிசோடில் வர இருக்கிறது. மேலும் பாக்கியா இதற்கெல்லாம் விரைவில் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.