இது என் வீடு.. ராதிகா, மயூவுடன் வீட்டிற்குள் வந்த கோபி – விபரீத முடிவால் அதிர்ந்து போன பாக்கியா!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ரேஷன் கார்டு வாங்க பாக்கியா வீட்டிற்கு சென்று இருக்க, பின்னாலே ராதிகா வந்து இது என் வீடு என சண்டை போட இருக்கிறார். அதெல்லாம் இனி வரும் எபிசோடில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் வர இருக்கிறது. தற்போது கோபி குடும்பத்தை விட்டு ராதிகாவை தன் குடும்பமாக ஏற்றுக் கொண்டுள்ளார். இப்போது கோபிக்கு புதிய பிரச்சனை ஒன்று வந்துள்ளது. அதாவது ராதிகா புதிதாக ரேஷன் கார்டு வாங்க வேண்டும் என சொல்லி கோபியிடம் சண்டை போடுகிறார். கோபி வேற வழியில்லாமல் பாக்கியாவிற்கு போன் செய்து ரேஷன் கார்டு கேட்கிறார்.
Exams Daily Mobile App Download
ஆனால் பாக்கியா கொடுக்க முடியாது என சொல்லி போனை வைக்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் ராதிகா சண்டை போட்டு கோபியை ரேஷன் கார்டு வாங்கி வர சொல்லி அனுப்புகிறார். கோபியும் வேறு வழி இல்லாமல் வீட்டிற்கு வருகிறார். அப்போது பாக்கியாவும் ராமமூர்த்தியும் ரேஷன் கார்டு கொடுக்க முடியாது என சொல்கின்றனர். ஆனால் கோபி ரேஷன் கார்டு வேண்டும் என சண்டை போட பின்னாடியே ராதிகா வருகிறார்.
அமுதவாணனை கலாய்த்து தள்ளிய கமல் சார் – கலகலப்பான “பிக்பாஸ் சீசன் 6” ப்ரோமோ!
Follow our Instagram for more Latest Updates
அவர் வந்து ரேஷன் கார்டு தர முடியவில்லை என்றால், நானும் இந்த வீட்டில் தான் இருப்பேன் என சொல்லி சண்டை போடுகிறார். ராதிகாவை என்ன சொல்லி சமாளிப்பது என தெரியாமல் குடும்பத்தினர் திண்டாட்டத்தில் இருக்கின்றனர். கோபியும் ரேஷன் கார்டு கொடுக்கவில்லை என்றால் நாங்க எல்லாரும் இங்கே தான் இருப்போம் என சொல்கிறார். இதெல்லாம் அடுத்து வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. அதனால் இனி பாக்கியலட்சுமி கதையில் பல திருப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.