செழியனை விட்டு பிரிய நினைக்கும் ஜெனி, அடுத்த அதிர்ச்சியில் குடும்பம் – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த திருப்பம்!
செழியன் கொஞ்சம் கூட பாக்கியாவை புரிந்துகொள்ளாமல் இருப்பதால் செழியனுக்கும் ஜெனிக்கும் இடையே சண்டை நடக்கிறது. இதனால், ஜெனி செழியனை விட்டு பிரிந்து சென்றுவிடலாம் என நினைக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல் ட்விஸ்ட்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்பியதை வைத்தே பாக்கியாவை தற்போது வரைக்கும் திட்டி கொண்டிருக்கின்றனர். அப்பா இருந்த வரைக்கும் வீட்டில் இந்த மாதிரியான பிரச்சனை வந்ததே கிடையாது என செழியன் கூறுகிறார். இதற்கிடையே இனியாவும் வந்து அப்பா இருக்கும் போதெல்லாம் காரில் தான் பள்ளிக்கு செல்வேன். தற்போது பஸ்ஸில் பள்ளிக்கு போக மிகவும் கேவலமாக இருக்கிறது என கூறுகிறார்.
இதனை கேட்டு கொண்டிருந்த எழில் இனியாவை திட்டுகிறார். உடனே, ஈஸ்வரி கோவப்பட்டு இனியா சரியாக தானே கூறுகிறார். கோபி இருந்தபோது வீட்டில் இவ்வளவு கஷ்டம் இருந்ததா என கோபி செய்த மொத்த தவறையும் மறந்துவிட்டு பேசுகின்றனர். இது மட்டும் போதாதென்று கரண்ட் பில் 17000 கட்ட வேண்டும் என சொல்லுகின்றனர். இவ்வளவு பெரிய தொகையை கட்ட வேண்டுமா என பாக்கியா திணறுகிறார். உடனே, செழியன் இது தான் சரியான நேரம் என பாக்கியாவை திட்ட ஆரம்பிக்கிறார். பின்னர், எழில் செழியனிடம் சண்டை போட்டு நான் இந்த பணத்தை கட்டி கொள்கிறேன் என கூறுகிறார்.
தமிழகத்தில் நாளை கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் – முழு விவரம் இதோ!
பின்னர், ஜெனி செழியனிடம் உன்னிடம் தான் காசு இருக்கிறதே நீ கொடு என சொல்கிறார். உடனே, செழியன் நான் எதற்காக கொடுக்க வேண்டும் என கூற ஜெனி பயங்கரமாக கோவப்படுகிறார். அங்கிள் செய்த அனைத்தையும் மறந்துவிட்டு எப்படி அவருக்கு ஆதரவாக பேசுகிறாய் என கேட்கிறார். ஆனாலும், செழியன் எப்போதும் நான் வீட்டிற்காக கொடுக்கும் பணத்தை கூட தரமாட்டேன். அம்மாவே அனைத்து செலவையும் பார்த்துக்கொள்ளட்டும் என கூறுகிறார். பின்னர், உன்னோடுலாம் என்னால் வாழ முடியாது என ஜெனி கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்