இத தான எதிர்பார்த்தோம்.. இனியாவிற்கும் ராதிகாவிற்கும் இடையே வெடித்த சண்டை – கோபி யார் பக்கம்?
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனி வரும் எபிசோடில் இனியாவிற்கும் ராதிகாவிற்கும் சண்டை வர இருக்கிறது. அதனால் கோபி யார் பக்கம் இருக்க போகிறார் என இனியா கேட்க இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கதைக்களம் சூடுபிடித்து இருக்கிறது. இனியா பாக்கியாவிடம் கோவித்து கொண்டு கோபி உடன் சென்றுவிட்டார். அதனால் இனியாவை பார்த்துக் கொள்ள ராமமூர்த்தியும் கூட சென்றுவிடுகிறார். அதனால் குடும்பத்தில் அனைவரும் வருத்தத்துடன் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது வரை ராதிகா இனியாவை நன்றாக கவனித்து கொள்கிறார். ஆனால் இனியா தான் ராதிகாவிடம் சரியாக முகம் கொடுத்து பேசாமல் இருக்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடில் இனியாவிற்கு ராதிகா காபி போட்டு கொடுக்கிறார். ஆனால் இனியாவிற்கு காபி பிடிக்காது என்பதால் அவள் அதை குடிக்காமல் மயூவிடம் பேசிக் கொண்டிருக்கிறாள். உள்ளே இருந்து வந்த ராதிகா இனியாவிடம் ஏன் காபி குடிக்கவில்லை என கேட்கிறார். உடனே இனியா பதில் சொல்லாமல் இருக்கிறாள். ராதிகா நான் உன்னிடம் தான் பேசுகிறேன் என சொல்கிறார்.
விஜய் டிவியின் பேமஸ் சீரியலில் அதிரடியாக மாற்றப்பட்ட முக்கிய கதாபாத்திரம் – ரசிகர்கள் ஷாக்!
Exams Daily Mobile App Download
உங்களிடம் பேச வேண்டும் என எனக்கு அவசியம் இல்லை என இனியா பதில் சொல்கிறாள். அப்போது வந்த கோபி என்னாச்சு என கேட்கிறார். அப்போது இனியா என்னிடம் அதிகாரம் செய்ய இவங்க யாரு என கேட்கிறாள். உடனே கோபி ராதிகாவிடம் நீ என்ன கேட்டாய் என கேட்க, ஏன் காபி குடிக்கவில்லை என கேட்டதாக சொல்கிறார். இனியாவிற்கு காபி பிடிக்காது என கோபி சொல்ல, இவளுக்கு காபி மட்டும் இல்லை என்னை கூட தான் பிடிக்காது என ராதிகா சத்தமாக சொல்கிறார். உடனே இனியா ஆமாம் பிடிக்கவில்லை இப்போ என்ன என கேட்க, டாடி உங்களுக்கு நான் முக்கியமா இல்லை அவங்க முக்கியமா என கேட்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.