நான் பண்ணது மகா தப்பு.. பல மாதங்கள் கழித்து மௌனம் கலைந்த விஜய் டிவி பிரியங்கா – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பிக்பாஸ்” நிகழ்ச்சி மக்களின் வரவேற்பை பெற்ற ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி. இதில் சென்ற சீசனில் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா கலந்து கொண்ட நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதே தவறு என விளக்கம் ஒன்றை வீடியோவாக அவர் வெளியிட்டு இருக்கிறார்.
தொகுப்பாளினி பிரியங்கா:
சின்னத்திரையில் ஏகப்பட்ட ரியலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை விரும்பி பார்க்கும் ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இதுவரை ஐந்து சீசன்களை கடந்த நிலையில், அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டவர் தொகுப்பாளினி பிரியங்கா. அவர் விஜய் டிவியில் டிடிக்கு பின் மிகவும் பிரபலமானவர்.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு முன்பு பாசிட்டிவ் கமெண்ட்ஸ் எந்த அளவிற்கு பெற்றாரோ அந்த அளவிற்கு அந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு நெகட்டிவ் விமர்சனங்களும் வந்தது. இருந்தாலும் அவர் பிக்பாஸ் சீசன் 5ன் இரண்டாவது இடத்தை பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் தன்னுடைய தொகுப்பாளர் பணியை அவர் செய்து வருகிறார். மேலும் பல பிரபலமான நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கி வருகிறார்.
Exams Daily Mobile App Download
பிரியங்கா சமீபத்தில் மலேசியா சென்று இருந்தார். அங்கே மலேசியா மக்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து நெகிழ்ச்சி அடைந்துள்ளதாக தன்னுடைய யுடியூப் சேனலில் அவர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மலேசியா மக்கள் காட்டிய அன்பால் நான் நெகிழ்ந்து போனேன். அவர்களுக்கு நான் என்ன செய்தேன்? எதற்காக அவர்கள் என் மீது இவ்வளவு அன்பு காட்டுகிறார்கள்? என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிக்பாஸ் வீட்டிற்கு சென்றது தவறான முடிவு என நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு முழு அளவில் ஆதரவு கொடுத்தது மலேசியா மக்கள் தான் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைந்தேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.