2வது குழந்தை அர்ஷ் & மகள் ஐலா பற்றி ஆல்யா வெளியிட்ட இன்ஸ்டா பதிவு – ரசிகர்கள் உருக்கம்!
ஆலியா தற்போது தான் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்நிலையில், எனது மகன் அர்ஷ் மற்றும் மகள் ஐலா பாப்பாவால் மட்டுமே எங்களது குடும்பம் அனைத்து விதமான மகிழ்ச்சியையும் பெற்று முழுமையடைந்துள்ளது என ஆலியா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஆல்யா வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:
விஜய் தொலைக்காட்சியில் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியல் மூலமாக ஒருவரையொருவர் சந்தித்து காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. தற்போது ஆலியாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. 9 மாத கர்ப்பமாக இருந்த நிலையிலும் கூட ஆலியா ராஜா ராணி 2 தொடரில் தொடர்ந்து நடித்து கொண்டிருந்தார். பிரசவம் முடிந்து மீண்டும் ராஜா ராணி தொடரில் இணைந்து நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
குழந்தையோடு குழந்தையாகவே மாறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் – வைரலாகும் வீடியோ!
ஆனால் இனிமேல் குழந்தையை கவனிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த போகிறேன் என கூறிவிட்டார். குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே ஆண் குழந்தையாக இருந்தால் அர்ஷ் எனவும், பெண் குழந்தையாக இருந்தால் லைலா எனவும் பெயர் வைக்கலாம் என முடிவு செய்துவிட்டனர். தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளதால் அறிவித்தபடி அர்ஷ் என பெயர் வைத்துள்ளனர். குழந்தையை முதன்முதலில் கையில் வாங்கிய புகைப்படத்தை சஞ்சீவ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கார்டு தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும்?
இந்நிலையில், தற்போது ஐலா பாப்பா மற்றும் அர்ஷ்ஷால் எங்களது குடும்பம் நிறைவடைந்துவிட்டது. உங்களது ஆசிர்வாதமும் எங்களுக்கு வேண்டும். இதுவரை எங்களுக்கு கொடுத்துவந்த அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி என கூறி ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். மேலும், ஆலியா தனது குழந்தைகளுக்காக தாய்ப்பாலில் ஆபரணங்கள் செய்து வைத்துள்ளார். எனது குழந்தைகளுக்கு இதைவிட சிறந்த பரிசை என்னால் கொடுக்கவே முடியாது எனவும் கூறியுள்ளார்.