‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு – போலீஸ் ஸ்டேஷனில் வைத்து பாக்கியாவை ஏமாற்றும் கோபி!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களத்தில் ஏதோவொரு காரணத்திற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் கோபி அங்கு வைத்தும் வழக்கம் போல பாக்கியாவை ஏமாற்ற இருப்பதாக வெளியான வீடியோ ஒன்று ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்திருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியல்
இதுவரை பல நூறு எபிசோடுகளை கடந்தும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி இன்னும் அவரது குடும்பத்தாரிடம் மாட்டவில்லை என்பது ரசிகர்களுக்கு சற்று வருத்தம் அளிக்கக்கூடிய விஷயமாக இருந்து வருகிறது. விஜய் டிவியில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் பல தரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் டிவியில் ஒளிபரப்பாகும் எபிசோடுகளை தாண்டி சமூக வலைதளங்களிலும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் இந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் கோபி கதாப்பாத்திரம் தான்.
கோபியின் திருமணத்திற்கு புறப்பட்ட குடும்பத்தினர் – ஷாக்கான பாக்கியா! சீரியலில் அடுத்த திருப்பம்!
ஏனென்றால், தனது குடும்பத்தாரின் கண்களில் மண்ணை தூவி விட்டு ராதிகா என்ற கல்லூரி கால காதலியுடன் பழகிக் கொண்டிருக்கும் கோபி எப்போது அவரது மனைவி பாக்கியாவிடம் மாட்டுவார், இந்த உண்மை தெரிந்தால் பாக்கியா என்ன ரியாக்ஷன் கொடுப்பார் என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். மறுபக்கத்தில் கோபி பற்றிய உண்மையை அறிந்த எழில் மற்றும் ராமமூர்த்தி இருவரும் உண்மையை சொல்லவும் முடியாமல், உள்ளே வைத்து கொண்டு மெல்லவும் முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில் இந்த உண்மை வீட்டுக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்று ஒவ்வொரு முறையும் கோபி பயப்படும் பயம், ராதிகா மற்றும் பாக்கியாவிடம் பொய் சொல்லி கோபி இரண்டு சைடும் கோல் அடிப்பது, அவ்வப்போது எழிலிடம் மாட்டிக்கொண்டு திருட்டு முழி முழிப்பது எல்லாம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதனால், நெட்டிசன்கள் இவரை கோபி தலைவா, சிறந்த நடிகர் என்று பட்டப் பெயரிட்டு அழைத்தும் வருகின்றனர். இவரது நடிப்பினால் தான் இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் இந்த அளவுக்கு ரீச் அடைந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
இப்படி இருக்க பல அட்டெம்டுகளில் ராமமூர்த்தி மற்றும் எழிலிடம் மாட்டி தப்பித்துள்ள கோபி அடுத்தகட்டமாக போலீஸ் ஸ்டேஷன் செல்லவிருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. அது என்ன காரணத்திற்காக என்று தெரியாத பட்சத்தில் அவரை காப்பாற்ற போலீஸ் ஸ்டேஷன் வரும் பாக்கியாவை அங்கு வைத்தும் ஏமாற்றப்போவதாக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சதீஸ். இதனுடன் ஒரு நாள் முழுவதும் ராதிகாவுடன் காரில் சுற்றிக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார். அந்த வகையில், இதன் மூலமாக எதுவும் பிரச்சனைகள் எழுந்திருக்கலாம் என்றும் அதனால் தான் கோபி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றிருக்கலாம் என்று கணிப்புகள் எழுந்திருக்கிறது.