நடிகர் விஜயின் சொகுசு கார் வழக்கு விசாரணை – நீதிமன்றம் ஒத்திவைப்பு!
இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தனது ரோல்ஸ் ராய்ஸ் கார் மீது நடிகர் விஜய் நுழைவு வரி விலக்கு கோரி வழக்கு தொடர்ந்த காரணத்தினால், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்:
இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தனது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நடிகர் விஜய் நுழைவு வரி விலக்கு கோரியிருந்தார். இதனால் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துடன், வரி கட்டுவது கட்டாயம், உச்ச நட்சத்திரங்கள் ரியல் வாழ்க்கையிலும் ஹீரோக்களாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டு நீதிமன்ற நகல் வெளியிடப்பட்டது. நடிகர் விஜய் 2011-12 ஆம் ஆண்டில் இந்த காரை வாங்கியதாக கூறப்படும் நிலையில் இப்படி ஒரு உத்தரவை நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் பிறப்பித்திருந்தார். அத்துடன் இந்த அபராதத் தொகை ரூ.1 லட்சத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மூத்த குடிமக்களுக்கான ரூ.10,000 உதவித்திட்டத்துடன் சிறப்பு மசோதா – மத்திய அரசு முடிவு!
தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்தும், தீர்ப்பில் இருந்த தன் மீதான விமர்சனங்களை நீக்கவும் கோரி நடிகர் விஜய் மேல்முறையீடு செய்திருந்தார். தனி நீதிபதியின் தீர்ப்பு நகல் இல்லாமல் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொள்ள அனுமதி கேட்ட இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், மஞ்சுளா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த ஜூலை 19ம் தேதி விசாரணைக்கு வந்தது.
TN Job “FB Group” Join Now
அப்போது வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வுக்கு, நடிகர் விஜயின் மனுவை மாற்றுமாறு நீதிமன்ற பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது நீதிபதிகள் துரைசாமி, ஹேமலாதா அமர்வு முன்பு நடைபெற்றது. நடிகர் விஜய் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை ஏற்ற நீதிபதிகள், வழக்கு தொடர்பான ஆவணங்களை அரசு தரப்புக்கு வழங்க உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு குறித்த விசாரணையை ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.