மீண்டும் பாக்கியலட்சுமி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி நடிகை – உற்சாகத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவியின் நடிகர், நடிகைகளுக்கு தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பல தொலைக்காட்சி நிறுவனங்களை காட்டிலும், விஜய் டிவியின் சீரியல் நடிகர்களை மக்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்கின்றனர்.
நடிகையின் ரீஎன்ட்ரி:
பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரித்திகா. இவர் இளம் வயதில் கணவரை இழந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு சீரியலில் ஒரு குழந்தையும் உள்ளது. இவரையும் இவரது நிலையையும் தெரிந்தே பாக்கியாவில் 2 வது மகன் எழில் இவரை காதலிக்கிறார். சீரியலில் ரித்திகாவின் பெயர் அம்ரிதா. அம்ரிதா ஆரம்பத்தில் எழிலின் காதலை அறிந்து அவரை விட்டு விலக தொடங்கினார்.
ஆனால், அம்ரிதாவின் அத்தையும் மாமாவும் எழிலை விட நல்லவரை பார்க்க முடியாது என்று கூறி வந்தார்கள். மேலும், நாளடைவில் எழிலின் பாசத்தை பார்த்து அம்ரிதாவும் எழிலை காதலிக்க தொடங்குகிறார். பாக்கியாவின் குடும்பத்தில் உள்ள அனைவரும் அம்ரிதாவுடன் நல்ல முறையில் பழகி வருகிறார்கள். ஆனால் ஈஸ்வரி மற்றும் செழியனுக்கு மட்டும் எழில் அம்ரிதாவுடன் பழகுவது பிடிக்கவில்லை. இதனால் ஈஸ்வரி இவர்கள் இருவரையும் கவனித்துக் கொண்டே இருக்கிறார்.
கோபியை எதிர்த்து புதிய அவதாரம் எடுக்கும் பாக்கியா – ஆச்சரியத்தில் குடும்பத்தினர்!
எழில் மற்றும் அம்ரிதாவின் காட்சிகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ஆனால் இடையில் சில வாரங்களாக பாக்கியா மற்றும் கோபிக்கு இடையிலான பரபரப்பான காட்சிகள் சீரியலில் வருவதால், அம்ரிதாவின் காட்சிகள் வரவில்லை. ஆனால், ரசிகர்களை மீண்டும் உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையில் ரித்திகா மீண்டும் பாக்கியலட்சுமி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்