சென்னையில் ‘விக்ரஹா ரோந்து கப்பல்’ சேவை தொடக்க விழா – முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு!
சென்னையில் நாளை ‘விக்ரஹா ரோந்து கப்பல்’ சேவை தொடக்க விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பங்கேற்க உள்ளார்.
விக்ரஹா ரோந்து கப்பல்:
கடலில் ரோந்து பணிகளுக்கு பயன்படுத்தப்படும் கப்பல்களில் 7வது இடம் வகிப்பது விக்ரஹா ரோந்து கப்பல். இந்த அதிநவீன இந்திய கடலோர காவல்படை கப்பலான விக்ரஹா பணியினை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. இந்த இந்திய கடலோர காவல்படை கப்பலான விக்ரஹாவில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – ஒரு நிமிடத்தில் போன் நம்பரை கண்டறியலாம்!
இது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்தை மையமாகக் கொண்டு செயல்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த கப்பல் கடலோர காவல் படையின் கிழக்கு பகுதி தளபதியின் கட்டுப்பாட்டில் கிழக்கு கடல் பகுதியில் பணியாற்றும். 98 மீட்டர் நீளமுள்ள ரோந்து கப்பலில் 11 அதிகாரிகள் உடன் 110 மாலுமிகள் இருப்பார்கள் என கூறப்படுகிறது. இத்துணை சிறப்பம்சங்களை கொண்ட இந்த கப்பலானது லார்சன் & டூப்ரோ ஷிப் பில்டிங் லிமிடெட் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
நவீன தொழில்நுட்ப ராடார்கள், தொலைத்தொடர்பு மற்றும் பயண கருவிகள், சென்சார்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. ஒரு 40/60 போஃபோர்ஸ் துப்பாக்கி, இரண்டு 12.7 மி.மீ ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கிகள் போன்றவற்றை கொண்டிருக்கும். ஒரு ஹெலிகாப்டர் மற்றும் நான்கு அதிவேக படகுகள் ஆகியவற்றை சுமந்து செல்லும் வகையில் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கப்பலுடன் சேர்த்து 157 கப்பல்கள் மற்றும் 66 விமானங்கள் இந்திய கடலோர காவல் படையிடம் உள்ளதாக கூறப்படுகிறது.