தமிழகத்தில் பேருந்து சேவை, பள்ளி & கல்லூரிகள் திறப்பு – முதல்வர் வெளியிட்ட வீடியோ!

0
தமிழகத்தில் பேருந்து சேவை, பள்ளி & கல்லூரிகள் திறப்பு - முதல்வர் வெளியிட்ட வீடியோ!
தமிழகத்தில் பேருந்து சேவை, பள்ளி & கல்லூரிகள் திறப்பு - முதல்வர் வெளியிட்ட வீடியோ!
தமிழகத்தில் பேருந்து சேவை, பள்ளி & கல்லூரிகள் திறப்பு – முதல்வர் வெளியிட்ட வீடியோ!

தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கவில்லை என்றால் தளர்வுகள் திரும்ப பெறப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் காணொளி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தளர்வுகள் ரத்து:

கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தான் முழு ஊரடங்கு. தமிழகத்திலும் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தற்போது கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருகிறது. அந்த வகையில் மக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றி கொள்ளும் விதமாக முழு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த தளர்வுகளை பொது மக்கள் முறையாக பின்பற்றாத வகையில், அவை திரும்ப பெறப்படும் என முதல்வர் அறிவுறுத்தி காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு? முதல்வர் முக்கிய ஆலோசனை!

அதில், ‘தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, கொரோனா பாதிப்பானது தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் தினசரி பாதிப்பு 35 ஆயிரத்துக்கும் மேலாக பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 15 ஆயிரத்துக்கும் கீழ் நோய் பாதிப்பானது குறைந்து வருகிறது. அதே போல மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் படுக்கை வசதிக்கான பற்றாக்குறை குறைந்துள்ளது.

தமிழக அரசின் முயற்சியால் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பாலும் தான் கொரோனா பாதிப்பானது கட்டுக்குள் வந்துள்ளது. ஊரடங்கை முழுமையாகவும், முறையாகவும் கடைபிடித்த மக்களுக்கு நன்றி. தமிழகத்தில் முழு ஊரடங்கை நீட்டிக்க கோரிய மக்களின் எண்ணங்களை தான் அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துவிட்டதே தவிர, பாதிப்புகள் குறையவில்லை. இருந்தாலும் மக்களின் தேவைகளை அறிந்து தான் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

ஆனால் கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்காத பட்சத்தில் தளர்வுகள் திரும்ப பெறப்படும். ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாட்டுடனும், துணி கடைகள், சலூன் கடைகளில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் மதுக்கடைகளை திறந்ததற்கு காரணம், கள்ளச்சாராயம், போலி மதுபானம் போன்றவை காரணமாக மக்கள் சீரழிந்து விடக்கூடாது என்பதற்காக தான். மேலும் தளர்த்தப்பட்ட சேவைகளை மக்கள் முறையாக பின்பற்றினால் தான் பள்ளி, கல்லூரிகள், போக்குவரத்து சேவைகளை மீண்டும் துவங்க முடியும். இதற்கு கண்டிப்பாக மக்கள் துணை அவசியம்’ என்று கூறப்பட்டிருந்தது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!