அதி வேகமாக பரவும் குரங்கு அம்மை பரவல் – அரசு எச்சரிக்கை! அச்சத்தில் பொதுமக்கள்!

0
அதி வேகமாக பரவும் குரங்கு அம்மை பரவல் - அரசு எச்சரிக்கை! அச்சத்தில் பொதுமக்கள்!
அதி வேகமாக பரவும் குரங்கு அம்மை பரவல் - அரசு எச்சரிக்கை! அச்சத்தில் பொதுமக்கள்!
அதி வேகமாக பரவும் குரங்கு அம்மை பரவல் – அரசு எச்சரிக்கை! அச்சத்தில் பொதுமக்கள்!

இந்தியாவிலும் குரங்கு அம்மை நோய்த் தொற்று பரவி வருகிறது. தற்போது கேரளாவில் மீண்டும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அம்மாநில பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

குரங்கு அம்மை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் மீண்டு வரும் வேளையில் அடுத்த தாக்குதலாக குரங்கு அம்மை நோய் தீவிரமெடுத்து பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மற்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் குரங்கு அம்மை நுழைந்து விட்டது. கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறி தென்பட்டது. இதனையடுத்து இவரது மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் அந்த நபருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டது.

Exams Daily Mobile App Download

இந்நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகு வலி, தசை வலி, சோர்வு ஆகிய அறிகுறிகள் தென்படும். அத்துடன் உடல் குளிர்ச்சி நிணநீர் கணுக்களில் வீக்கம் ஆகியவை இருக்கும். தற்போது கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு பரவியதை அடுத்து மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இரண்டாவதாக கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இனி வெள்ளிக்கிழமைகளில் அரசு பள்ளிகளுக்கு வாராந்திர விடுமுறை? முக்கிய தகவல் வெளியீடு!

கடந்த 2 நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து கேரளா வந்த 40 வயதான நபருக்கு லேசான காய்ச்சல் மற்றும் கொப்புளங்கள் இருந்ததை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் தற்போது பரியாரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது குரங்கு அம்மை நோய்த் தாக்கம் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தீவிர பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இதுவரை 2 நபர்கள் குரங்கு அம்மை வைரஸ் தொற்றிற்கு ஆளாகியுள்ளதை அடுத்து அம்மாநில மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!