சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் – செகண்ட் லுக் வெளியீடு!
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்புவின் 47-வது படமான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் செகண்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது. இதை பார்த்து ரசிகர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.
வெந்து தணிந்தது காடு:
நடிகர் சிம்பு, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின்னர் 5 ஆண்டுகள் கழித்து “வெந்து தணிந்தது காடு” படம் மூலமாக மீண்டும் இணைந்துள்ளனர். இது சிம்புவின் 47வது படமாகும். இந்த படத்திற்கு திரைக்கதையை ஜெயமோகன் எழுதியுள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படம் முற்றிலும் கிராமத்து பின்னணியில் வித்தியாசமான ஆக்ஷன் த்ரில்லர் நிறைந்து உருவாகி வருகிறது.
சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு – ‘இதை’ செய்தால் தொழில் உரிமம் ரத்து!
படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கி உள்ளது. இதுவரை சிம்பு நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே தெரிந்தது. அதே போல எப்போதும் இதமான காதல் கதைகளையே இயக்கிய கெளதம் மேனன், இந்த முறை யாரும் எதிர்பார்க்காத ஒரு படைப்பை கொடுக்க தயாராகி விட்டார்.
TN Job “FB Group” Join Now
இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக காயடுலோஹர் என்பவர் நடிக்கிறார். எனவே சிம்புவின் காதல் காட்சிகள், இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் எடுக்கப்படலாம் என கூறப்பட்டது. அவ்வப்போது இந்த படம் குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது செகண்ட் லுக் வெளியாகியுள்ளது. இரண்டாவது லுக்கில் சிம்பு, வேலை செய்து விட்டு, களைப்பில் இருப்பது போலவும், படுக்க கூட இடம் இல்லாத ஒரு அறையில் பலர் படுத்திருப்பது போலவும், சிம்பு அழுக்கு கைலி மற்றும் பனியனுடன் அமர்ந்திருப்பது போலவும் உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ஆர்வத்துடன் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.