பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா, துர்காவிற்கு திருமணம் – அடுத்த ட்விஸ்ட்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
பாரதி கண்ணம்மா சீரியல் இல்லதரசிகளின் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு நாளும் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்த சீரியலில் கடந்த சில தினங்களாக பாசப்போராட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வெண்பாவை துர்கா திருமணம் செய்வது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ப்ரோமோ வெளியீடு:
சமீப காலமாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் கதையில் புதிய திருப்பங்கள் பல அரங்கேறி கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில், அருண் பிரசாந்த் மற்றும் வினுஷா தேவி நடித்துள்ளார். மேலும் வில்லி கதாபாத்திரத்தில் வெண்பா நடித்து வருகிறார். இந்த சீரியலில் கடந்த 8 வருடங்களாக பாரதியையும் கண்ணம்மவையும், பல வில்லதனங்களை செய்து வெண்பா பிரித்து வைத்துள்ளார். ஆனால் வெண்பா, பாரதியை திருமணம் செய்து கொள்ள தான் இப்படியெல்லாம் செய்தார். ஆனால் அந்த ஆசை கடைசி வரை நிறைவேறவில்லை. இதுவரை கண்ணம்மா, பாரதி, சௌந்தர்யா என அனைவரையும் ஓடவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வில்லி வெண்பாவுக்கு அம்மா ரூபத்தில் ஒரு சோதனை வந்திருக்கிறது.
Exams Daily Mobile App Download
வெண்பாவின் அம்மா கதாபாத்திரத்தில் நடிகை ரேகா களம் இறங்கி உள்ளார். வெண்பாவின் அம்மா, அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்த வந்த நாளில் இருந்தே நான் சொல்லும் மாப்பிள்ளை தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வெண்பாவிற்கு கண்டிஷன் போடுகிறார். பாரதி கண்ணம்மா பிரச்சனையை விட வெண்பாவிற்கு இப்போது வந்துள்ள பிரச்சனை தான் பெரியதாக இருக்க போகிறது. அம்மாவின் பிடியில் சிக்கிக் கொண்ட வெண்பா, வேறு வழியில்லாமல் அவர் காட்டும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள ஓகே சொல்லி இருக்கிறார்.
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வீக்எண்ட் ப்ரோமோ ரிலீஸ்!
இப்படி இருக்க வெண்பாவை திருமணம் செய்து கொள்ளப் போகும் அந்த மாப்பிள்ளை யாராக இருக்கும், அவர் இந்த சீரியலில் நடித்த துர்காவாக இருக்குமா, இல்லை வருண் மாப்பிள்ளையாக வருவாரா என்று சில சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. மேலும் லக்ஷ்மிக்கு தன் அப்பா பாரதி தான் என்று தெரிந்த உண்மை, தற்போது கண்ணம்மாவிற்கு தெரிந்து விட்டது. இந்நிலையில் வெண்பா, துர்காவை திருமணம் செய்து கொள்வது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இனி சீரியல் விறுவிறுப்பின் உச்சத்தில் இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். வெண்பாவின் திருமணத்தை அடுத்து பாரதி, கண்ணம்மா, குழந்தைகள் என 4 பேரும் ஓன்று சேர்ந்து, இந்த சீரியல் ஒரு முடிவுக்கு வரவும் வாய்ப்பு உள்ளது.