‘குக் வித் கோமாளி’ பரத்திடம் இருந்து விலகிய செப் வெங்கடேஷ் பட் – காரணம் என்ன? ரசிகர்கள் அதிர்ச்சி!
குக் வித் கோமாளிநிகழ்ச்சியில் கோமாளிகள் அனைவரும் செய்யும் கலாட்டாக்களை தாங்க முடியாமல் நடுவர்கள் மற்றும் குக்குகள் அவர்களை செல்லமாக திட்டுவதும், அடிப்பது போன்றும் நிகழ்ச்சியில் கட்டப்படும். தற்போது அது போன்ற சம்பவங்கள் காரணமாக பட் செய்த செயல் வைரலாகி வருகிறது.
குக் வித் கோமாளி 3:
குக் வித் கோமாளி சீசன் 3 ல் போட்டியாளர்கள் அனைவரும் மும்முரமாக சமையல் செய்யும் ஆர்வத்தில் இருக்கும் போது அவர்களை திசை திருப்புவதற்காகவே நியமிக்கப்பட்ட கோமாளிகள் தங்கள் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். இது தொடர்பான ப்ரோமோக்கள் அனைத்தும் எப்போதும் இணையத்தில் முன்னதாகேவ வெளியாகி விடுகிறது. அதேபோல், முடிந்து விட்ட எபிசோடுகளில் உள்ள சிறப்பான காட்சிகள் அல்லது விமர்சனத்திற்கு உள்ளான காட்சிகள் மீண்டும் இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.
அது போல், தற்போது செஃப் வெங்கடேஷ் பட் அவர்கள் கடந்த வாரம் சூப்பர் சிங்கர் பரத்திடம் இருந்து சற்று ஒதுங்கியே இருந்ததாக கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது. அதாவது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் முதல் வார எபிசோடிலேயே பரத் செய்த சேட்டைகள் காரணமாக பட் அவரை விரட்டி அடிப்பது போல் காட்டப்பட்டது. இது பார்க்க மிகவும் நகைச்சுவையாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் அதிக விமர்சனங்களை பெற்றது.
இதனால் செஃப் பட் அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் நிகழ்ச்சியில் வருவது அனைத்தும் மக்களை சிரிக்க வைக்கப்பதற்காக மட்டுமே. இதனை வெறும் நிகழ்ச்சியாக மட்டும் மக்கள் பார்க்க வேண்டும் என்றும், இது யார் மனதும் புண்படும் படி நடக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், மேலும் இது போன்ற கருத்துக்கள் அவர் மீது வைக்கப்பட்டது. இதனால் இனி இது போன்ற நெகட்டிவ் கருத்துக்களுக்கு தான் பதில் அளிக்கப்போவதில்லை என்று கூறியிருந்தார். இதனால் தான் கடந்த வாரத்தில் பரத் செய்த் சேட்டைகளுக்கு அவர் சற்று தள்ளி இருந்தார் என்றும் கூறப்படுகிறது.