ஆரம்பமே சர்ச்சையில் சிக்கிய ‘குக் வித் கோமாளி 3’ – பரத்தை அடித்தது ஏன்? வெங்கடேஷ் பட் விளக்கம்!
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3 கடந்த வாரம் முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் முதல் வாரத்திலேயே சர்ச்சையான விஷயங்கள் நடந்து, பேசு பொருளாக மாறியுள்ளது.
குக் வித் கோமாளி 3:
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனியாக ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நபர்கள் அனைவரும் அதிக புகழை பெற்று வருகின்றனர். அந்த வகையில் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் அதிக ஆதரவை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக 3 வது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. கடந்த வாரம் சனிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆல்யா மனசா ரசிகர்களுக்கு ‘ராஜா ராணி’ சஞ்சீவ் விடுத்த வேண்டுகோள் – வைரலாகும் பதிவு!
தொடர்ந்து 10 குக்குகளும், 10 கோமாளிகளும் அறிமுக செய்யப்பட்டனர். போட்டியாளர்களாக ரோஷினி, சுருதிகா, வித்யூ லேகா, மனோ பாலா போன்றவர்கள் வந்திருந்தனர். கோமாளிகளாக முன்னர் இருந்த ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி போன்றவர்களும், புதிதாக சூப்பர் சிங்கர் பரத் மற்றும் மூக்குத்தி முருகன் போன்றவர்களும் வந்துள்ளனர். அதிக எதிர்பார்ப்போடு ஆரம்பித்த நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக தான் சென்றது. ஆனால் அதிலும் ஒரு சர்ச்சையை பார்வையார்கள் கிளப்பி உள்ளனர்.
ராதிகா கோபி திருமணம் பற்றி சொன்ன மயூரா, அதிர்ச்சியில் ராமமூர்த்தி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
செஃப் வெங்கடேஷ் பட் அவர்கள் கோமாளிகளை குச்சியை வைத்து அடிப்பது போல் துரத்தி வந்தார். இது ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை. இதனால் செஃப் பட் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இது வெறும் டிவி நிகழ்ச்சி தான். அதனால் அதை வெறும் டிவி ஷோவாக மட்டும் பாருங்கள். உங்களை மகிழ வைக்க மட்டும் தான் நிகழ்ச்சி இந்த விதமாக நடத்தப்படுகிறது. அது யாரையும் புண் படுத்தப்படாது. செட்டில் நடப்பவை எல்லாமே வெறும் ஃபன் என்று குறிப்பிட்டுள்ளார். இவர் அளித்துள்ள விளக்கம் தற்போது ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.