தமிழகத்தில் வியாபாரிகளுக்கு ரூ.5000 நிவாரணம் – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் சாலையோர வியாபாரிகள் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வந்த நிலையில் நிவாரண நிதி வழங்க முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிவாரண நிதி:
இந்த பேரிடர் காலத்தில் பலரும் தங்களது உயிரை பாதுகாத்துக்கொள்ள வீட்டை விட்டே வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டுள்ளனர். கடந்த வருடத்தை விட இந்த வருடம் இந்த கொரோனாவின் ஆட்டம் அதிக வீரியமாக உள்ளது. இதனால் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 3 மணிவரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி – ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு!
இதனால் அதிக பாதிப்படைந்தது சிறிய நடைபாதை, சாலையோர வியாபாரிகள் தான். அதுவும் மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் சாலையோர வியாபாரிகள் தான் அதிக பாதிப்படைந்துள்ளனர். ஊரடங்கால் வியாபாரமும் இன்றி, வாங்கிய கடனை கட்ட முடியாமலும் மேலும் சாப்பாட்டிற்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் சாலையோர வியாபார தொழிலாளர்கள் கூட்டமைப்பு தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கும் பொருட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்ததாவது, இந்த ஊரடங்கால் வியாபார முதலீட்டிற்கு வாங்கிய கடனை கூட அடைக்க முடியாமல் வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.
ஜூன் 14 வரை காலை 9 மணிமுதல் கடைகள் திறக்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!
ஒருவேளை உணவிற்கு கூட வழியில்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அவங்களின் குடும்பத்தை காக்கும் பொருட்டு நிவாரணத் தொகையாக ரூ.5000 வழங்க உத்தரவிட வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.