தனது சதியால் பாரதியை வீழ்த்தும் வெண்பா – பாரதி கண்ணம்மா சீரியலின் அடுத்த கட்டம்!
பாரதி கண்ணம்மா சீரியலில் பல தடைகளை கடந்து கண்ணம்மா பாரதியுடன் சேருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தால், வெண்பா தான் பாரதியை மீண்டும் ஏமாற்றி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா தனது குழந்தைகளுக்காக பாரதியுடன் சேர்ந்து விட வேண்டும் என்று நிறைய முயற்சிகளை செய்கிறார். ஆனால் பாரதி எதற்கும் அசைவதாக இல்லை. குடும்பத்துடன் சேர்ந்து பாரதிக்கு அனைவரும் அறிவுரைகளை கூறியும் பாரதி அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. இந்நிலையில், தீவிரவாதிகளிடம் இருந்து தப்பித்து வந்த பிறகு கதையில் ஒரு முக்கிய திருப்பம் வரும் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்தனர்.
SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக் அறிவிப்பு – வட்டி விகிதம் உயர்வு! இனி அதிக பணம் செலவாகும்!
அதேபோல், முக்கிய திருப்பமும் வந்துள்ளது. வெண்பா சாரதியுடன் செய்த தவறின் விளைவால் கர்ப்பமாக இருக்கிறார். ஆனால், பாரதியை திருமணம் செய்வதில் இதனால் ஏதேனும் குழப்பம் வந்து விடுமோ என்று பயப்படுகிறார். முதலில் கத்தி, ஆர்ப்பாட்டம் செய்து வந்த வெண்பா வழக்கம் போல் சதி செய்ய யோசிக்கிறார். அதன்படி, தன் வயிற்றில் பாரதியின் குழந்தை வளருவதாக பொய் சொல்லி வருகிறார்.
Exams Daily Mobile App Download
இதனால் பாரதி அதிர்ச்சி அடைகிறார். பின்னர் வெண்பா பாரதியிடம், நீ தான் என்னை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுகிறார். பாரதி அதற்கும் சம்மதிக்கவில்லை என்பதால், விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். அவரை மருத்துவமனையில் சேர்த்து பாரதி காப்பாற்றுகிறார். கண் திறக்கும் வெண்பா நீ மட்டும் என்னை கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் கண்டிப்பாக மீண்டும் தற்கொலை செய்து கொள்வேன் என்று சொல்லி அழுகிறார். இதனால் பாரதி வெண்பாவை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்