தமிழகம் முழுவதும் வாகன சோதனைகள் தீவிரம் – உயர் அதிகாரிகள் உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 14 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் வாகன சோதனைகளை குறைத்திருந்தனர். இதனால் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் மீண்டும் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வாகன சோதனை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வந்தது. அதன் காரணமாக மே 24 முதல் ஜூன் 7 வரை தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தில் இருந்து 17 ஆயிரமாக குறைந்தது. இதனால் ஜூன் 7 ஆம் தேதி பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜூன் 14 வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி? மருத்துவர்கள் விளக்கம்!
தளர்வுகள் அறிவிப்பின் படி, அனைத்து அத்தியாவசிய தேவை கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட பல்வேறு நகரங்களில் போக்குவரத்து சிக்னல்களை இயக்கினால் தான் வாகனங்கள் செல்ல முடியும் என்கிற அளவிற்கு போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
மாவட்டங்களுக்கு உள்ளே அவசர தேவைகளுக்கு செல்ல இ-பதிவு முறை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இ-பதிவு இணையதளம் முடங்கும் அளவிற்கு மக்கள் பதிவு செய்து வருகின்றனர். மாவட்டங்களுக்குள் மருத்துவ காரணங்களுக்காக செல்ல இ-பதிவு இல்லை என்ற காரணத்தால், பலர் வெளியில் நடமாடுவதை காண முடிகிறது. இதனால் சமூக இடைவெளி கேள்விக்குறியாக உள்ளது. காவல்துறையினர் முன்னதாக தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது தளர்வுகள் காரணமாக மாலை 6 மணிக்கு மேல் மட்டுமே வாகன சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் சென்னை உயர்நீதிமன்றம் மக்களின் அலட்சியத்தையும் கண்டித்து ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு அறிவுறுத்தி உள்ளது. இதன்படி இன்று (ஜூன் 11) முதல் காவல்துறையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். தேவையின்றி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.