இந்தியாவில் அதிகரிக்கும் வேலையிழப்பு.. 385 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்யும் Vedantu!
இந்தியாவில் வளர்ந்து வரும் பிரபல EDUTECH நிறுவனமான வேதாந்து 385 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
பணி நீக்கம்:
அனைத்து துறைகளிலும் தற்போது நடந்து வரும் பணி நீக்க செயல்பாடுகள் கல்வியையும் விட்டு வைக்கவில்லை. EDUTECH நிறுவனமான வேதாந்து ஆரம்பகட்டத்தில் ஆன்லைன் செயல்பாடுகளை மட்டும் செய்துவந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னதாக தான் ஆப்லைன் டியூஷன் சென்டர்களையும் தொடங்கியது. இதன்மூலம் நிறுவனத்தின் வருமானம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் 2020 நிதியாண்டில் அந்நிறுவனத்தின் வருமானம் 24.6 கோடி ஆக இருந்தது.
18 மாத கால அகவிலைப்படி நிலுவைத்தொகை எப்போது? – அரசு ஊழியர்கள் கோரிக்கை!
Exams Daily Mobile App Download
அதன்பின்னர் 2021 நிதியாண்டில் வருமானம் 3 மடங்கு அதிகரித்து ரூ.93.7 கோடியாக இருந்தது. ஆனால் அதேசமயம் நிறுவனத்தின் செலவுகள் ரூ.604.28 கோடியாக இருந்தது. 2022 நிதியாண்டிற்கான வேதாந்து நிறுவனத்தின் வருமான அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், அந்நிறுவனம் கடந்த மே மாதத்தில் 624 பேரையும், ஆகஸ்ட் மாதத்தில் 100 பேரையும் பணி நீக்கம் செய்துள்ளது. தற்போது அதிரடியாக மேலும் 385 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.