தப்பிப்பிழைத்த `பாம்புபிடி’ மன்னன் வாவா சுரேஷ் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!
கேரளா மாநிலங்களில் உள்ள பாம்புகளை எவ்வித அச்சமும் இல்லாமல், வாவா சுரேஷ் என்பவர் பிடித்து வருகிறார். இந்த நிலையில் ஜனவரி 31ம் தேதி அவரை பெரிய நாகப்பாம்பு கடித்து ஆபத்தான நிலையில் இருந்தார். இருப்பினும் தற்போது வாவா சுரேஷ் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
“நான் தான் வாவா சுரேஷ்”
கேரளாவில் `பாம்பு மனிதன்’, `பாம்பு பிடி மன்னன்’ என அழைக்கப்படும் வாவா சுரேஷ், ராஜநாகம் உட்பட 50,000-க்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்திருக்கிறார். அவருடைய பாம்பு பிடிக்கும் புகைப்படங்களுக்கு சமூக ஊடகத்தில் ரசிகர் பட்டாளமும் உண்டு. இந்த வாவா சுரேஷ் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். இந்த நிலையில் வாவா சுரேஷின் வழக்கமான வேலை அந்தப் பகுதிகளில் வீட்டு பகுதிகளுக்கு வரும் விஷப் பாம்புகளைப் பிடிப்பதுதான்.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கட்டாய விடுமுறை – மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு!
இந்த வகையில் கடந்த ஜனவரி 31ம் தேதி சங்கனாச்சேரி அருகில் இருக்கும் குறிச்சிப் பகுதியில் 7 அடி நீளம் உள்ள நாகப்பாம்பினை வளைத்து பிடிக்கும் போது, அந்த நாக பாம்பு வாவா சுரேஷின் வலது தொடையில் கடித்தது. இதனால் வாவா சுரேஷ் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். மேலும் இவரை அப்பகுதி மக்கள் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வாவா சுரேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
TNPSC குரூப் 4 VAO தேர்வு 2022 குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணைய தலைவர் தகவல்!
சுரேஷ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாவா சுரேஷ் பாம்பிடம் கடி வாங்குவது முதல் முறை அல்ல என்றாலும், அவர் குணமடைய பலரும் பிரார்த்தனை செய்து வந்தனர். தற்போது, வாவா சுரேஷின் உடல் நிலை குணமடைந்த தாகவும், அவர் நினைவு திரும்பி “நான் தான் வாவா சுரேஷ்” என்று பேசியதாகவும் மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.