மீண்டும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இணையவிருக்கும் வருண் – பாரதிக்கு உண்மைகள் தெரியவருமா?
பாரதியும் கண்ணம்மாவும் தற்போது ஒரே மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்துள்ள நிலையில் கண்ணம்மா மீது பாரதிக்கு சந்தேகம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் வருண் மீண்டும் சீரியலில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. கண்ணம்மா மீதுள்ள சந்தேகம் குறைந்து பாரதி எப்போது தான் கண்ணம்மாவை ஏற்றுக் கொள்ளப் போகிறாரோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கும் மேலாக கண்ணம்மா மீது சந்தேகப்பட்டு கண்ணம்மாவை விட்டு பாரதி விலகியே இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
வெண்பா தான் பாரதியிடம் வருணுக்கும் கண்ணம்மாவிற்கும் சின்ன வயதிலிருந்தே பழக்கம் இருக்கிறது. தற்போதும் கூட தவறாக தான் இருவரும் பழகிக் கொண்டிருக்கிறார்கள் என பாரதியிடம் கூறி பாரதியின் மனநிலையை மாற்றுகிறார். வெண்பாவின் பேச்சை கேட்டு பாரதியும் கண்ணம்மா மீது சந்தேகப்பட்டு கண்ணம்மா மீது வெறுப்பை கொட்டி கொண்டிருக்கிறார். இதற்கு நடுவே வெண்பாவின் அம்மாவான ஷர்மிளா வெண்பாவை விட படு வில்லியாக இருப்பார் என எதிர்பார்த்த சமயத்தில் அவர் பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க வேண்டுமென நினைத்துக் கொண்டிருக்கிறார்.
கோபியை பற்றிய உண்மையை தெரிந்துகொண்டு அதிர்ச்சியடையும் கோபியின் அம்மா – ப்ரோமோ ரிலீஸ்!
அவ்வப்போது ஷர்மிளா வெண்பாவிடம் நீ பாரதியை விட்டு விலகி வரவேண்டும். நான் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென மிரட்டிக் கொண்டிருக்கிறார். எப்படியும் பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்துவிடுவார்கள் என ரசிகர்கள் நிம்மதியடைந்த நிலையில் வருண் சீரியலில் மீண்டும் என்ட்ரி ஆக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பிறகாவது பாரதிக்கு கண்ணம்மா மீதுள்ள சந்தேகம் குறையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.