விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் வருண் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க ஹேமா முயற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் தற்போது சீரியலில் மீண்டும் வருண் என்ட்ரி கொடுப்பது போன்ற ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா தொடரில் பாரதி கண்ணம்மாவை ஏற்றுக்கொள்வாரா இல்லையா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே தன்னுடைய அப்பா யார் என்பதை அறிந்து கொண்டு லட்சுமி பாரதியை அப்பா என்று தான் அழைத்துக் கொண்டு இருக்கிறார். ஆனால், ஹேமாவிற்கு தன்னுடைய அம்மா யார் என்பது தற்போது வரைக்கும் கூட தெரியாது. கண்ணம்மாவை பாரதிக்கு திருமணம் செய்து வைத்து ஹேமா, லட்சுமி, கண்ணம்மா மற்றும் பாரதி என நான்கு பேரும் ஒரே வீட்டில் வசிக்க வேண்டும் என்பதுதான் ஹேமாவிற்கு மிகப்பெரிய ஆசையாக இருந்து வருகிறது.
Exams Daily Mobile App Download
தற்போது கூட பள்ளியில் பேச்சுப் போட்டியில் ஹேமா முதல் பரிசை வாங்குகிறார். அந்தப் பரிசை பாரதி மற்றும் கண்ணம்மாவின் கையால் வாங்கினால் தன்னுடைய அம்மா அப்பாவின் கையால் வாங்கியது போல எனக்கு தோன்றும் என ஹேமா கூறுகிறார். பின்பு, ஹேமா பாரதி மற்றும் கண்ணம்மாவின் கையால் அந்த பரிசை வாங்குவதைப் பார்த்து குடும்பத்திலுள்ள அனைவருமே மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர். எதற்காக ஹேமா இந்த மாதிரி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என ஹேமா மீது பாரதி கோபப்படுகிறார்.
இந்த நேரத்தில் மீண்டும் பாரதி கண்ணம்மா தொடரில் வருண் என்ட்ரி கொடுப்பது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது. வருணை பார்த்ததும் பாரதி உன்னால்தான் எனது வாழ்வில் இவ்வளவு பெரிய பிரச்சனை. எனது கல்யாண வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது என வருணை பாரதி கண்டபடி திட்டுகிறார். இதற்குப் பிறகாவது கண்ணம்மாவிற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை பாரதியிடம் வருண் கூறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.